கைது செய்யப்பட்ட சதீஷ்குமார் போதை வஸ்துக்களை கடத்தி வந்து பல்வேறு கடைகளுக்கு விற்பனைக்கு கொடுப்பது விசாரணையில் தெரியவந்தது.
கோவை: கோவை கிணத்துக்கடவு அரசம்பாளையம் பிரிவில் இருசக்கர வாகனத்தில் 2.5 கிலோ போதை வஸ்துக்களை கடத்தி வந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அருள்பிரகாஷ், சிறப்பு உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி, தலைமை காவலர் ரத்தினசாமி ஆகியோர் கிணத்துக்கடவு அருகே உள்ள அரசம்பாளையம் பிரிவு அருகே நேற்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது, அதில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட போதை வஸ்துக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபரிடம் விசாரணை செய்ததில் முன்னுக்கு முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார், அவரிடமிருந்த 2.5 கிலோ போதை வஸ்துக்களை பறிமுதல் செய்து இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த கல்லாங்காட்டுபுதூர் எஸ்.எஸ்.நகர் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார்(30) கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சதீஷ்குமார் போதை வஸ்துகளை கடத்தி வந்து பல்வேறு கடைகளுக்கு விற்பனைக்கு கொடுப்பது விசாரணையில் தெரியவந்தது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அருள்பிரகாஷ், சிறப்பு உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி, தலைமை காவலர் ரத்தினசாமி ஆகியோர் கிணத்துக்கடவு அருகே உள்ள அரசம்பாளையம் பிரிவு அருகே நேற்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது, அதில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட போதை வஸ்துக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபரிடம் விசாரணை செய்ததில் முன்னுக்கு முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார், அவரிடமிருந்த 2.5 கிலோ போதை வஸ்துக்களை பறிமுதல் செய்து இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த கல்லாங்காட்டுபுதூர் எஸ்.எஸ்.நகர் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார்(30) கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சதீஷ்குமார் போதை வஸ்துகளை கடத்தி வந்து பல்வேறு கடைகளுக்கு விற்பனைக்கு கொடுப்பது விசாரணையில் தெரியவந்தது.