கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்டு குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள், சுடுமண் பொருட்கள், அகல்விளக்கு உள்ளிட்ட தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


கோவை: தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறை சார்பில் கோயம்புத்தூர் மாவட்டம் பூலுவப்பட்டி அருகே உள்ள மோளப்பாளையத்தில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட தொல்லியல் அகழாய்வில், இரண்டு குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் உள்ளிட்ட அரிய தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.




தமிழ்ப் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் கேரள மாநிலத்தின் ஆலுவா யு.சி. கல்லூரி மாணவர்கள் பங்கேற்றுள்ள இந்த அகழாய்வு, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முனைவர் வீ. செல்வகுமார் தலைமையில் ஏப்ரல் 18 முதல் நடைபெற்று வரும் இந்த அகழாய்வில், முதுகலை வரலாறு மற்றும் தொல்லியல் மாணவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு 2021 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின் தொடர்ச்சியாக தற்போது மூன்றாம் கட்ட ஆய்வு நடைபெறுகிறது.






அகழாய்வில் தாழி வடிவிலான குழி வீடுகள், பல்வேறு வகையான குழிகள், குச்சி நடுகுழிகள், மெருகேற்றப்பட்ட பானை ஓடுகள், புதிய கற்கால கருவிகள், அம்மிக்கற்கள், தானியச் சான்றுகள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டுள்ளன. மேலும், குழிகளின் சுற்றுப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட குச்சி நடுகுழிகள், அக்கால மக்களின் குடியிருப்பு அமைப்புகளை வெளிப்படுத்துவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.






இதனுடன், கடற்சங்குகளால் செய்யப்பட்ட பல்வேறு வகை மணிகள், சுடுமண் பொருட்கள், அகல்விளக்கு மற்றும் பானை ஓடுகளும் கிடைத்துள்ளன. குறிப்பாக இரண்டு முதல் மூன்று வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.






மேலும், ஆடு, மாடு, மான், ஆமை உள்ளிட்ட விலங்குகளின் எலும்புகளும் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் மேலாய்விற்காக அனுப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




கரியமிலக் காலக்கணிப்பு ஆய்வுகளின் அடிப்படையில், இந்த புதிய கற்கால வாழ்விடம் பொ.ஆ.மு. 1600 முதல் பொ.ஆ.மு. 1200 வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்தது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆய்வுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.


Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...