திருப்பூரில் செயல்பட்டு வந்த 'குபேரா ஆட்டோ பைனான்ஸ்' என்ற நிறுவனம் முதலீடு செய்தால் 24 சதவீதம் வரை வட்டி அளிப்பதாக விளம்பரம் செய்து, 20 பேரிடமிருந்து ரூ.12.66 லட்சம் பெற்று மோசடி.
கோவை: முதலீட்டுக்கு அதிக வட்டி அளிப்பதாகக் கூறி ரூ.12.66 லட்சம் மோசடி: மூவருக்கு 7 ஆண்டுகள் சிறை விதித்து கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
திருப்பூரில் செயல்பட்டு வந்த 'குபேரா ஆட்டோ பைனான்ஸ்' என்ற நிறுவனம் முதலீடு செய்தால் 24 சதவீதம் வரை வட்டி அளிப்பதாக விளம்பரம் செய்து, 20 பேரிடமிருந்து ரூ.12.66 லட்சம் பெற்று மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக, நிறுவனத்தின் இயக்குநரான திருப்பூரை சேர்ந்த சாமிநாதன், முத்துவேல், மணிவேல் ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், மொத்தம் ரூ.16 லட்சம் அபராதம் விதித்ததோடு, அபராத தொகையில் ரூ.15 லட்சத்தை முதலீட்டாளருக்கு பிரித்து அளிக்கவும் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் (டான்பிட்) உத்தரவு பிறப்பித்தது.
கடந்த 2015-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இவ்வழக்கில் இருந்து ராஜேந்திரகுமார், லோகநாயகி, செல்வி ஆகியோர் விடுவித்த நீதிபதி ரவி, தீர்ப்பின்போது ஆஜராகாத சாமிநாதன், மணிவேல் ஆகியோருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.
திருப்பூரில் செயல்பட்டு வந்த 'குபேரா ஆட்டோ பைனான்ஸ்' என்ற நிறுவனம் முதலீடு செய்தால் 24 சதவீதம் வரை வட்டி அளிப்பதாக விளம்பரம் செய்து, 20 பேரிடமிருந்து ரூ.12.66 லட்சம் பெற்று மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக, நிறுவனத்தின் இயக்குநரான திருப்பூரை சேர்ந்த சாமிநாதன், முத்துவேல், மணிவேல் ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், மொத்தம் ரூ.16 லட்சம் அபராதம் விதித்ததோடு, அபராத தொகையில் ரூ.15 லட்சத்தை முதலீட்டாளருக்கு பிரித்து அளிக்கவும் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் (டான்பிட்) உத்தரவு பிறப்பித்தது.
கடந்த 2015-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இவ்வழக்கில் இருந்து ராஜேந்திரகுமார், லோகநாயகி, செல்வி ஆகியோர் விடுவித்த நீதிபதி ரவி, தீர்ப்பின்போது ஆஜராகாத சாமிநாதன், மணிவேல் ஆகியோருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.