இந்த நிகழ்ச்சியில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கலந்து கொண்டு கட்சியின் கொடியை ஏற்றிவைத்து இனிப்பு வழங்கினார்.
கோவை: கோவை கிணத்துக்கடவில் காங்கிரஸ் கட்சியின் 137-வது நிறுவன நாள் தினத்தை முன்னிட்டு எம்.பி. கார்த்திக்சிதம்பரம் கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கினார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 137வது நிறுவன நாள் தின விழாவை இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, இன்று கோவை மாவட்டம் கிணத்துக்கடவு புதிய பேருந்து நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் கொடியேற்றி இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கலந்து கொண்டு காங்கிரஸ் கட்சியின் கொடியை ஏற்றிவைத்து கட்சியினருக்கு இனிப்பு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ., கந்தசாமி, மாவட்ட துணைத் தலைவர் வக்கீல் வித்யாசாகர், கிணத்துக்கடவு வட்டார தலைவர் சிவராஜ், கிணத்துக்கடவு நகர தலைவர் செந்தில்குமார், வட்டார பொதுச்செயலாளர் அறிவொளி வெள்ளிங்கிரி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 137வது நிறுவன நாள் தின விழாவை இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, இன்று கோவை மாவட்டம் கிணத்துக்கடவு புதிய பேருந்து நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் கொடியேற்றி இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கலந்து கொண்டு காங்கிரஸ் கட்சியின் கொடியை ஏற்றிவைத்து கட்சியினருக்கு இனிப்பு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ., கந்தசாமி, மாவட்ட துணைத் தலைவர் வக்கீல் வித்யாசாகர், கிணத்துக்கடவு வட்டார தலைவர் சிவராஜ், கிணத்துக்கடவு நகர தலைவர் செந்தில்குமார், வட்டார பொதுச்செயலாளர் அறிவொளி வெள்ளிங்கிரி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.