கோவையில் போளுவாம்பட்டி வனப்பகுதியில் இருந்து வெளிவந்த காட்டு யானைகள் கூட்டம்..! பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை..!!

இரவு நேரங்களில் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவையில் யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளிவந்த தகவல்களை நேற்று போளுவாம்பட்டி வனச்சரக அதிகாரிகள் தங்களின் அறிக்கை மூலமாக வெளியிட்டுள்ளனர்.

கோவை வனக்கோட்ட வனப்பகுதிகளில் இருந்து வெளிவரும் காட்டு யானைகள் நடமாட்டம் குறித்து போளுவாம்பட்டி வனத்துறை அதிகாரிகள் அறிவிப்பில் கூறியதாவது:-

ஒற்றை காட்டு ஆண் யானை வெளியே வந்த விபரங்களில் போலுவாம்பட்டியில் ஆதிநாராயணன் கோவில் பகுதியில் ஒரு யானை வெளிவந்துள்ளது,

மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில் உள்ள முந்திரி முடக்கு சரக பகுதியில் ஒரு யானை வந்துள்ளது. பெரியநாயக்கன் பாளையம் பகுதியில், கட்ட சாலை, திருமானூர் சாலை, அட்டி மாரியம்மன் கோவில் பகுதி என மூன்று இடங்களில் வந்துள்ளது,

கோவை வனச்சரகத்தில், மாங்கரை வன தணிக்கை நிலையத்தில் ஒரு யானை வந்துள்ளது. யானைகள் குழுவாக வெளியே வந்த விபரங்களின் அடிப்படையில், கோவை வனச்சரகத்தில் பாரதியார் யூனிவர்சிட்டி, வரப்பாளையம், லக்ஷ்மி நகர், மடத்தூர், நஞ்சுண்டாபுரம் ஆகிய பகுதிகளில், ஆண் யானைகள் 3, பெண் யானைகள் 12, குட்டி 5 என கூட்டமாக நான்கு இடங்களில் வந்துள்ளது.

காரமடை வனச்சரகத்தில் மேல்பாவி என்ற இடத்தில் ஆண் யானை 1, பெண் யானை 1 என இரு யானைகள் வந்துள்ளது. சிறுமுகை வனப்பகுதியில் கோவிந்தனூர், கருப்பராயன் கோவில் வீதி பகுதியில் ஆண் யானைகள் 7, பெண் யானைகள் 2 உலா வந்துள்ளது,

வனப்பகுதிகளை ஒட்டியுள்ள பகுதிகளில் வாழும் பொதுமக்கள் மேற்கண்ட பகுதிகளில் வாழும் மக்கள் மற்றும் விவசாயிகள், இரவு நேரங்களில் காவல் பணிபுரியும் நண்பர்கள் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் வெளிவருவதை தவிர்த்து மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் இரவு நேரங்களில் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

அதேபோல, இரவு நேரங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், இரவு நேரங்களில் வீட்டிற்கு வெளியே தூங்குவதைத் தவிர்க்க வேண்டும் எனவும், யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் குறிப்பாக இரவு நேரங்களில் யானைகள் அந்தப் பகுதியில் இருக்கிறது என கேள்விப்பட்டால் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

மேலும், இரவில் வெளியே செல்லும் பொழுது கைவிளக்குகளை உடன் எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் மக்கள் காட்டுயானைகளின் வழித்தடங்களில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும், பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் யானை நடமாட்டம் இருப்பின் அருகில் உள்ள வனப்பணியாளர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கோவை மாவட்ட வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...