பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து பி.எஸ்.என்.எல் அதிகாரிகளின் கூட்டமைப்பு சங்கத்தினர், சாய்பாபா கோவில் பகுதியில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலக வளாகத்திற்குள் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
கோவை: நிரந்தரப் பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து பி.எஸ்.என்.எல் அதிகாரிகளின் கூட்டமைப்பு சங்கத்தினர், சாய்பாபா கோவில் பகுதியில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலக வளாகத்திற்குள் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

அவர்களது கோரிக்கைகள்:-
1. தகுதியுள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.
2. மறுசீரமைப்பு உத்தரவுகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
3. JTO மற்றும் SDE சமமான கிரேடுகளுக்கு E2 மற்றும் E3 ஸ்டாண்டர்ட் PAY ஸ்கேல் செயல்படுத்த வேண்டும்.
4. DGM(T/F) பதவிகளுக்கும் ரெகுலர் DGM பதவி உயர்வு வழங்க வேண்டும்.
5. CAO பதவி உயர்வுக்கான தகுதி சேவையில் தளர்வு வைக்கவேண்டும்.
6. தற்காலிக பதவி உயர்வுகளை தவிர்த்து நிரந்தரப் பதவி உயர்வுகளை வழங்க வேண்டும்.
ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி 3 நாட்கள் நாடு தழுவிய தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
அவர்களது கோரிக்கைகள்:-
1. தகுதியுள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.
2. மறுசீரமைப்பு உத்தரவுகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
3. JTO மற்றும் SDE சமமான கிரேடுகளுக்கு E2 மற்றும் E3 ஸ்டாண்டர்ட் PAY ஸ்கேல் செயல்படுத்த வேண்டும்.
4. DGM(T/F) பதவிகளுக்கும் ரெகுலர் DGM பதவி உயர்வு வழங்க வேண்டும்.
5. CAO பதவி உயர்வுக்கான தகுதி சேவையில் தளர்வு வைக்கவேண்டும்.
6. தற்காலிக பதவி உயர்வுகளை தவிர்த்து நிரந்தரப் பதவி உயர்வுகளை வழங்க வேண்டும்.
ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி 3 நாட்கள் நாடு தழுவிய தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.