மதுக்கரை, காரமடை, கருமத்தம்பட்டி, கூடலூர் பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளதால் 2 ஆயிரம் வாக்காளர்களை அடிப்படையாக கொண்டு வார்டுகள் பிரிக்கப்பட்டுள்ளன.
கோவை: கோவை மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 4 நகராட்சிகளில் 27 வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வருவாய் துறை அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் மதுக்கரை, காரமடை, கருமத்தம்பட்டி மற்றும் கூடலூர் பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அண்மையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. புதிதாக எந்தப் பகுதிகளையும் இணைக்காமல் பேரூராட்சிகளை அப்படியே நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
இது குறித்து மாவட்ட வருவாய் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘மதுக்கரை, காரமடை, கருமத்தம்பட்டி, கூடலூர் பேரூராட்சிகளில் தலா 17 வார்டுகள் இருந்து. தற்போது நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதால் 2 ஆயிரம் வாக்காளர்களை அடிப்படையாக கொண்டு வார்டுகள் பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி 4 நகராட்சிகளிலும் தலா 9 வார்டுகள் கூடுதலாக சேர்க்கப்பட்டு 27 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளன,’’ என்று தெரிவித்தார்.
கோவை மாவட்டம் மதுக்கரை, காரமடை, கருமத்தம்பட்டி மற்றும் கூடலூர் பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அண்மையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. புதிதாக எந்தப் பகுதிகளையும் இணைக்காமல் பேரூராட்சிகளை அப்படியே நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
இது குறித்து மாவட்ட வருவாய் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘மதுக்கரை, காரமடை, கருமத்தம்பட்டி, கூடலூர் பேரூராட்சிகளில் தலா 17 வார்டுகள் இருந்து. தற்போது நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதால் 2 ஆயிரம் வாக்காளர்களை அடிப்படையாக கொண்டு வார்டுகள் பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி 4 நகராட்சிகளிலும் தலா 9 வார்டுகள் கூடுதலாக சேர்க்கப்பட்டு 27 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளன,’’ என்று தெரிவித்தார்.