கோவை - காரமடை சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நான்கு வழிச்சாலையாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பா.ஜ.க கோரிக்கை..!

மேலும், சுத்தமான குடிநீர் வழங்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


கோவை: காரமடை - கோவை சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, நான்கு வழிச்சாலையாக மாற்ற, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பா.ஜ.க கோரிக்கை விடுத்துள்ளது.

மத்திய, ஒன்றிய பா.ஜ., செயற்குழுக் கூட்டம், காரமடையில் நடந்தது. ஒன்றிய தலைவர் விக்னேஷ் தலைமை வகித்தார். மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ் பேசினார்.

அப்போது, காரமடை கார் ஸ்டாண்டில் இருந்து மயானம் வரை, கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும்.

தற்போது இருக்கும் குறுகிய சாலையில், காரமடையில் அடிக்கடி மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, இந்த சாலையை அகலப்படுத்த, நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

காரமடை நகராட்சியில் வரும் குடிநீரின் தரம் மிகவும் மோசமாக உள்ளது. சுத்தமான குடிநீர் வழங்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில், மாவட்ட கல்வியாளர் பிரிவு நிர்வாகி கண்ணப்பன், செயற்குழு உறுப்பினர் வாசுதேவன் முன்னிலை வகித்தனர்.ஆனந்தகுமார் வரவேற்றார். மாவட்ட மீனவர் அணி தலைவர் ஞானசேகரன் நன்றி கூறினார்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...