கோவை - காரமடை சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நான்கு வழிச்சாலையாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பா.ஜ.க கோரிக்கை..!

மேலும், சுத்தமான குடிநீர் வழங்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


கோவை: காரமடை - கோவை சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, நான்கு வழிச்சாலையாக மாற்ற, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பா.ஜ.க கோரிக்கை விடுத்துள்ளது.

மத்திய, ஒன்றிய பா.ஜ., செயற்குழுக் கூட்டம், காரமடையில் நடந்தது. ஒன்றிய தலைவர் விக்னேஷ் தலைமை வகித்தார். மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ் பேசினார்.

அப்போது, காரமடை கார் ஸ்டாண்டில் இருந்து மயானம் வரை, கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும்.

தற்போது இருக்கும் குறுகிய சாலையில், காரமடையில் அடிக்கடி மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, இந்த சாலையை அகலப்படுத்த, நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

காரமடை நகராட்சியில் வரும் குடிநீரின் தரம் மிகவும் மோசமாக உள்ளது. சுத்தமான குடிநீர் வழங்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில், மாவட்ட கல்வியாளர் பிரிவு நிர்வாகி கண்ணப்பன், செயற்குழு உறுப்பினர் வாசுதேவன் முன்னிலை வகித்தனர்.ஆனந்தகுமார் வரவேற்றார். மாவட்ட மீனவர் அணி தலைவர் ஞானசேகரன் நன்றி கூறினார்.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...