வால்பாறை பகுதியில் வனச்சரகத்தில் உள்ள களைச்செடிகள் அழிப்பு..!

'மோண்டனா ஹிமிசிங்போலியோ' என்ற களை தாவரங்கள் வளர்ச்சியால் இயற்கையாக வளரக்கூடிய மரச்செடிகள், இயற்கை தாவரங்களின் வளர்ச்சி முற்றிலும் பாதிக்கப்படுகிறது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் வனச்சரகத்தில் உள்ள களைச்செடிகள் அழிக்கப்பட்டன.

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட, வால்பாறை, மானாம்பள்ளி வனச்சரகங்களில், இதர தாவரங்களுக்கு இடையூறாக உள்ள 'மோண்டனா ஹிமிசிங்போலியோ' என்ற களை தாவரத்தினை அழிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

பொள்ளாச்சி கோட்ட துணை இயக்குனர் கணேசன், வனச்சரக அலுவலர் மணிகண்டன் தலைமையில், வனத்துறையினர், அந்த களைச்செடிகளை அழிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

வனத்துறையுடன், ரத்தினம் கலை மற்றும் அறியவில் கல்லூரி, என்.ஜி.பி., கலைக்கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள், களைச்செடிகளை முற்றிலும் அழிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

'மோண்டனா ஹிமிசிங்போலியோ' என்ற களை தாவரங்கள் வளர்ச்சியால், அப்பகுதியில் இயற்கையாக வளரக்கூடிய மரச்செடிகள், இயற்கை தாவரங்களின் வளர்ச்சி முற்றிலும் பாதிக்கப்படுகிறது.

இதனால், தாவர உண்ணிகள் உணவுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதுடன், வனவிலங்குகளின் உணவு சங்கிலி தொடர்பில் இப்பகுதியில், வன உயிரினங்கள் இயற்கை சூழலை பாதிக்கும் நிலை ஏற்படுகிறது.

இதை கருத்தில் கொண்டு, அந்த களைச்செடிகளில் இருந்து விதைகள் பரவாமல் தடுக்கும் வகையில், அறியவில் பூர்வமாக பூக்கள் மற்றும் அதன் விதைகளை சேகரம் செய்து, சுமார் ஒரு டன் அளவில் அழிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...