கோவையில் இருவேறு இடங்களில் கஞ்சா பறிமுதல்: 4-பேர் கைது

சட்ட விரோத செயலில் ஈடுபடுவோர் பற்றி தகவல் தெரிவிக்க கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ் அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.


கோவை: இருவேறு இடங்களில் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில் போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்கும் பொருட்டு அன்னூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாகத் தடைசெய்யப்பட்ட உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய போதைப்பொருட்களை விற்பனை செய்வதாக ரகசியத் தகவல் கிடைத்தது.



அதன் அடிப்படையில் அன்னூர் காவல் நிலைய ஆய்வாளர் நித்தியா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, அன்னூர் பசூர் பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த பரமக்குடியை சேர்ந்த அம்மாசி என்பவரது மகனான புலிக்குட்டி (எ) பாலமுருகன்(30) மற்றும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கஜேந்திர மகனந்தா என்பவரது மகனான லோக்நாத் மகனந்தா (27) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து சுமார் 6 கிலோ எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்து மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

இதேபோல், கோவை திருச்சி ரோடு சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சிங்காநல்லூர் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்று சோதனையிட்டனர். அப்போது போலீசாரை பார்த்ததும் 2 வாலிபர்கள் தப்பி ஓட முயன்றனர்.

போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒண்டிப்புதூர் சிவலிங்க புரத்தைச் சேர்ந்த தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் தரணிதரன் 19, சூர்யா நகரைச் சேர்ந்த சாம் 20 ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 500 கிராம் கஞ்சா ரூபாய் 2,300 மற்றும் ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கல்லூரி மாணவர்களே கஞ்சா விற்பனை செய்வது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்ட விரோத செயலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.

இதுபோன்ற சட்ட விரோத செயலில் ஈடுபடுவோர் பற்றி தகவல் தெரிவிக்க கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ் அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...