கடந்த வாரம் சனிக்கிழமை கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால், நேற்று சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
கோவை: பொள்ளாச்சியில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் ஏராளமான பொதுமக்கள் தடுப்புச் செலுத்திக் கொண்டனர்.
பொள்ளாச்சி நகரம், வடக்கு ஒன்றியம், தெற்கு ஒன்றியம், ஆனைமலை ஒன்றியம் உள்ளிட்ட பகுதிகளில், தமிழக அரசு சார்பில் அந்தந்த அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், சிறப்பு தடுப்பூசி முகாம் மையம், உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் வாரந்தோறும் சனிக்கிழமை அன்று செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் இந்த வாரம் சனிக்கிழமை கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால், நேற்று சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி நகரத்தில் 1,265 பொதுமக்களும், தெற்கு ஒன்றிய பகுதிகளில் 2,241 பேரும், வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 2,380 பேரும், ஆனைமலை ஒன்றியத்தில் 3,243 பேரும், தடுப்பூசி செலுத்தி உள்ளதாக, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்றும், இதில் அனைத்து பொதுமக்களும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு, பெரும் தொற்றில் இருந்து தங்களை தற்காத்துக் கொண்டு, சுற்றத்தாரையும் பாதுகாக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி நகரம், வடக்கு ஒன்றியம், தெற்கு ஒன்றியம், ஆனைமலை ஒன்றியம் உள்ளிட்ட பகுதிகளில், தமிழக அரசு சார்பில் அந்தந்த அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், சிறப்பு தடுப்பூசி முகாம் மையம், உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் வாரந்தோறும் சனிக்கிழமை அன்று செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் இந்த வாரம் சனிக்கிழமை கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால், நேற்று சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி நகரத்தில் 1,265 பொதுமக்களும், தெற்கு ஒன்றிய பகுதிகளில் 2,241 பேரும், வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 2,380 பேரும், ஆனைமலை ஒன்றியத்தில் 3,243 பேரும், தடுப்பூசி செலுத்தி உள்ளதாக, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்றும், இதில் அனைத்து பொதுமக்களும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு, பெரும் தொற்றில் இருந்து தங்களை தற்காத்துக் கொண்டு, சுற்றத்தாரையும் பாதுகாக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.