கோவையில் அரசு வங்கிகளை தனியார்மயமாக்கும் மத்திய அரசு நடவடிக்கையை எதிர்த்து வங்கி ஊழியர்கள் 2வது நாளாக ஆர்ப்பாட்டம்..!

இந்த இரண்டாவது நாள் ஆர்ப்பாட்டமானது கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள SBI வங்கியில் நடைபெற்றது.



கோவை: கோவையில் இரண்டாவது நாளாக அரசு வங்கிகளை தனியார்மயமாக்கும் மத்திய அரசு நடவடிக்கையை எதிர்த்து வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய அரசு சில தினங்களாகவே அரசு வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதற்கு அரசு வங்கி ஊழியர்கள் சார்பில் பெரும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வங்கி ஊழியர்கள் மத்திய அரசின் இந்த கொள்கை முடிவை கண்டித்து ஆர்ப்பாட்டகளை நடத்தி வருகின்றனர்.



இதனிடையே, இரண்டு நாள் அகில இந்திய வேலைநிறுத்த போராட்டத்தை அரசு வங்கி ஊழியர்கள் அறிவித்திருந்த நிலையில், நேற்று முதல் நாள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக இன்று ஆர்ப்பாட்டமானது நடைபெற்று வருகிறது.

நேற்று இரயில் நிலையம் எதிரில் உள்ள பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் முதல் நாள் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில், இரண்டாவது நாள் ஆர்ப்பாட்டமானது ரயில் நிலையம் அருகில் உள்ள SBI வங்கியில் நடைபெற்றது.

இதில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசின் வங்கிகள் தனியார்மயமாக்கும் முடிவிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.





Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...