தற்போது ரயில் நிலையத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் அலுவலகங்கள் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது.
கோவை: மின்மயமாக்கல் பணிகள் முடிவடைந்த நிலையில் கிணத்துக்கடவு ரயில் நிலையம் திடீர் மூடல் ஊழியர்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக போத்தனூர்- கிணத்துக்கடவு- பொள்ளாச்சி இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக மின்மயமாக்கல் பணிகள் நடைபெற்று தற்போது பணிகள் முடிவடைந்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சோதனை செய்யப்பட்டு சரக்குப் போக்குவரத்து தொடங்க ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
இந்த நிலையில், மின்மயமாக்கல் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் கிணத்துக்கடவு ரயில் நிலையம் திடீரென மூடப்பட்டுள்ளது.
ரயில் நிலையத்தில் பணியாற்றி வந்த ரயில் நிலைய அதிகாரி உட்பட நான்கு பேர் பொள்ளாச்சி ரயில் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது ரயில் நிலையத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் அலுவலகங்கள் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது.

மின்மயமாக்கல் பணிகள் முடிவடைந்து ரயில்கள் இயக்கப்படும் என எதிர்பார்த்து வந்த நிலையில் திடீரென கிணத்துக்கடவு ரயில் நிலையம் மூடப்பட்டு இருப்பது ரயில் பயணிகளுக்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா தொற்று காரணமாக போத்தனூர்- கிணத்துக்கடவு- பொள்ளாச்சி இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக மின்மயமாக்கல் பணிகள் நடைபெற்று தற்போது பணிகள் முடிவடைந்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சோதனை செய்யப்பட்டு சரக்குப் போக்குவரத்து தொடங்க ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
இந்த நிலையில், மின்மயமாக்கல் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் கிணத்துக்கடவு ரயில் நிலையம் திடீரென மூடப்பட்டுள்ளது.
ரயில் நிலையத்தில் பணியாற்றி வந்த ரயில் நிலைய அதிகாரி உட்பட நான்கு பேர் பொள்ளாச்சி ரயில் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது ரயில் நிலையத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் அலுவலகங்கள் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது.
மின்மயமாக்கல் பணிகள் முடிவடைந்து ரயில்கள் இயக்கப்படும் என எதிர்பார்த்து வந்த நிலையில் திடீரென கிணத்துக்கடவு ரயில் நிலையம் மூடப்பட்டு இருப்பது ரயில் பயணிகளுக்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.