வால்பாறையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 426 சம்பளம் உயர்த்தி முதலமைச்சர் உத்தரவு - தொழிலாளர்கள் மகிழ்ச்சி!

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு 426 ரூபாய் சம்பளம் உயர்த்தி வழங்கிய முதலமைச்சர் அவர்களுக்கு எஸ்.ஆர்.எஸ் சுரேஷ் தலைமையில் நன்றி தெரிவித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு 426 ரூபாய் சம்பளம் உயர்த்தி வழங்கிய முதலமைச்சர் அவர்களுக்கு எஸ்.ஆர்.எஸ் சுரேஷ் தலைமையில் நன்றி தெரிவித்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் தேயிலை தோட்ட எஸ்டேட் சுமார் 60 உள்ளன. இந்த எஸ்டேட் பகுதிகளில் சுமார் 50 ஆயிரம் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு தற்போது 347 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, இந்த ஆண்டு சம்பள பேச்சு வார்த்தை நடந்து வந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினையை ஆய்வு செய்து 426 ரூபாய் சம்பளம் வழங்க ஆணை பிறப்பித்தார்.

இதனை வரவேற்று தேயிலை தோட்ட தொழிலாளர்கள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். வால்பாறை 7வது வார்டு ஸ்டேன்மோர் ஆத்து மட்டம் எஸ்டேட், புது தோட்டம் பாரலை எஸ்டேட் தொழிலாளர்கள், முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

இந்நிகழ்வில், வால்பாறை நகர பொறுப்பாளர் பால்பாண்டி வர்த்தக அணி ஜெ. பாஸ்கர், தொழில் நுட்ப அணி சத்தியமூர்த்தி மற்றும் 7வது வார்டு கிளை செயலாளர் எஸ்.ஆர்.எஸ் சுரேஷ் விஜயன், பாபு, சுப்பிரமணி, ராஜ்குமார், வேதநாயகம், காளிமுத்து, பாபு, பார்வதி, தனம், கவிதா, சங்கீதா, ஜெயா போன்ற தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...