கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நம்பர் 10 முத்தூரைச் சேர்ந்த விவசாயி முருகானந்தம் என்பவர் கடந்த எட்டு நாட்களாக விதிமீறி செயல்படும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவை: பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கடவு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்ததாகக் கண்டறியப்பட்ட ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் உத்தரவிட்டுள்ளார்.

நம்பர் 10 முத்தூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி முருகானந்தம் கடந்த ஜூலை 21-ஆம் தேதி முதல், விதிமுறைகளை மீறி செயல்பட்டு வரும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுத்து அவற்றை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். எட்டு நாட்களாக நீடித்த அவரது போராட்டத்திற்கு விவசாயிகள், சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.



விதிமுறைகளை மீறி இயங்கும் கல்குவாரிகளால் கிணத்துக்கடவு மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக குவாரிகளில் அதிக அளவில் வெடிபொருட்கள் பயன்படுத்தி கற்கள் வெட்டி எடுப்பதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, கிணறுகள் வறண்டு வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், இதுதொடர்பாக பல ஆண்டுகளாக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகம், தாசில்தார், வருவாய்த்துறை என பல்வேறு துறை அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

போராட்டம் பரவலான கவனத்தை ஈர்த்ததைத் தொடர்ந்து, நேற்று சார் ஆட்சியர் தலைமையில் எட்டு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் 5 குவாரிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கல்குவாரிகளின் செயல்பாடு மற்றும் அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து விரிவாக ஆய்வு செய்தனர்.



அந்த ஆய்வறிக்கை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆறு கல்குவாரிகளின் செயல்பாட்டை தற்காலிகமாக நிறுத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...