கோவை அருகே தனியார் கார் பந்தய மைதானத்தில் கொரோனா விதிமீறல் - ரூ. 10 ஆயிரம் அபராதம்!

கோவை: கோவை அருகே உள்ள தனியார் கார் பந்தய மைதானத்தில் விதிமீறல் நடந்ததால் ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


கோவை: கோவை அருகே உள்ள தனியார் கார் பந்தய மைதானத்தில் விதிமீறல் நடந்ததால் ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். அத்துடன் தனியார் நிறுவனங்கள் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுபோன்று பொது இடங்களில் அதிக அளவில் கூட்டம் கூட கூடாது என்றும், பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கோவையை அடுத்த செட்டிபாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஓரட்டுகுப்பை பகுதியில் எல்.ஜி கார் பந்தய மைதானம் உள்ளது. இங்கு அதிக நபர்கள் கூடி பயிற்சியில் ஈடுபடுவதாக பேரூராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதுகுறித்து, மாவட்ட பேரூராட்சிகள் உதவி இயக்குனர் துவாரகநாத், மதுக்கரை தாசில்தார் நாகராஜ், மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனர் உமாதேவி, செட்டிபாளையம் செயல் அதிகாரி ஜெகதீஸ் மற்றும் போலீசார் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.



அப்போது, அந்த விதிமுறைகளை மீறி கூட்டம் சேர்த்தல், தனிமனித இடைவெளி இல்லாமலும், சிலர் முகக் கவசம் அணியாமல் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அதிகாரிகள் எல்ஜி கார்பந்தய நிர்வாகத்துக்கு ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும், கொரோனா விதிமுறைகளை மீறினால் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...