கோவை: கோவை அருகே உள்ள தனியார் கார் பந்தய மைதானத்தில் விதிமீறல் நடந்ததால் ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கோவை: கோவை அருகே உள்ள தனியார் கார் பந்தய மைதானத்தில் விதிமீறல் நடந்ததால் ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். அத்துடன் தனியார் நிறுவனங்கள் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுபோன்று பொது இடங்களில் அதிக அளவில் கூட்டம் கூட கூடாது என்றும், பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கோவையை அடுத்த செட்டிபாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஓரட்டுகுப்பை பகுதியில் எல்.ஜி கார் பந்தய மைதானம் உள்ளது. இங்கு அதிக நபர்கள் கூடி பயிற்சியில் ஈடுபடுவதாக பேரூராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதுகுறித்து, மாவட்ட பேரூராட்சிகள் உதவி இயக்குனர் துவாரகநாத், மதுக்கரை தாசில்தார் நாகராஜ், மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனர் உமாதேவி, செட்டிபாளையம் செயல் அதிகாரி ஜெகதீஸ் மற்றும் போலீசார் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

அப்போது, அந்த விதிமுறைகளை மீறி கூட்டம் சேர்த்தல், தனிமனித இடைவெளி இல்லாமலும், சிலர் முகக் கவசம் அணியாமல் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அதிகாரிகள் எல்ஜி கார்பந்தய நிர்வாகத்துக்கு ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும், கொரோனா விதிமுறைகளை மீறினால் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். அத்துடன் தனியார் நிறுவனங்கள் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுபோன்று பொது இடங்களில் அதிக அளவில் கூட்டம் கூட கூடாது என்றும், பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கோவையை அடுத்த செட்டிபாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஓரட்டுகுப்பை பகுதியில் எல்.ஜி கார் பந்தய மைதானம் உள்ளது. இங்கு அதிக நபர்கள் கூடி பயிற்சியில் ஈடுபடுவதாக பேரூராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதுகுறித்து, மாவட்ட பேரூராட்சிகள் உதவி இயக்குனர் துவாரகநாத், மதுக்கரை தாசில்தார் நாகராஜ், மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனர் உமாதேவி, செட்டிபாளையம் செயல் அதிகாரி ஜெகதீஸ் மற்றும் போலீசார் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
அப்போது, அந்த விதிமுறைகளை மீறி கூட்டம் சேர்த்தல், தனிமனித இடைவெளி இல்லாமலும், சிலர் முகக் கவசம் அணியாமல் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அதிகாரிகள் எல்ஜி கார்பந்தய நிர்வாகத்துக்கு ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும், கொரோனா விதிமுறைகளை மீறினால் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.