கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே கொண்டம்பட்டி பகுதியில் உள்ள ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அதி நவீன மேக்கர்ஸ்பேஸ் வளாகத் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே கொண்டம்பட்டி பகுதியில் உள்ள ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அதி நவீன மேக்கர்ஸ்பேஸ் வளாகத் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
VVDN டெக்னோலஜிஸ் நிறுவனத்தின் பொறியியல் துறையின் உபதலைவர் பாலகுமார் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஸ்ரீ ஈஸ்வர் மேக்கர்ஸ்பேஸ் வளாகத்தைத் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

விழாவில் கல்லூரியின் முதல்வர் சுதா மோகன்ராம் அனைவரையும் வரவேற்று பேசிய போது, மாணவர்களின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்தி, அவர்கள் செயற்கை நுண்ணறிவு மற்றும் ஐ.ஓ.டி போன்ற வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களில் சிறந்த ப்ராஜெக்ட்கள் செய்ய இந்த வளாகத்தில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து விழாவின் சிறப்பு விருந்தினர் பாலகுமார் பேசும் போது, தொழில் துறையின் தேவைகளைக் கண்டறிந்து அவற்றைத் தகுந்த பாட திட்டங்கள் மற்றும் இது போன்ற ஆய்வகங்கள் மூலம் பூர்த்தி செய்யும் கல்லூரியின் முயற்சியைப் பாராட்டினார்.
மேலும், கல்லூரியின் இயக்குனர் ராஜாராம் பேசும் போது, இந்த வளாகத்தில் சுமார் நூறு பேர் அமர்ந்து ப்ராஜெக்டுகள் செய்ய வசதிகளும், ஐ.ஓ.டி தொழில் நுட்பத்தில் பயிற்சி மற்றும் ப்ராஜெக்டுகள் செய்ய ஒரு பிரத்தியேகப் பிரிவு, தவிர கலந்துரையாடல் அரங்கம் மற்றும் ப்ராஜெக்டுகளை மேற்பார்வை செய்ய ஆசிரியர்களுக்கான அறைகளும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கல்லூரியின் தொழில் துறை நல்லுறவு இயக்குனர், கண்ணன் நரசிம்மன், தொழில் துறையின் தேவைகளைக் கண்டறிந்து பூர்த்தி செய்ய, கல்லூரி தொடர்ந்து எடுத்து வந்துள்ள பல முயற்சிகளைப் பட்டியலிட்டு பேசினார்.
விழாவின் முடிவில் கல்லூரியின் மின்னணு மற்றும் தகவல் பொறியியல் துறையின் பேராசிரியர் சண்முகசுந்தரம் நன்றி கூறினார்.
VVDN டெக்னோலஜிஸ் நிறுவனத்தின் பொறியியல் துறையின் உபதலைவர் பாலகுமார் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஸ்ரீ ஈஸ்வர் மேக்கர்ஸ்பேஸ் வளாகத்தைத் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
விழாவில் கல்லூரியின் முதல்வர் சுதா மோகன்ராம் அனைவரையும் வரவேற்று பேசிய போது, மாணவர்களின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்தி, அவர்கள் செயற்கை நுண்ணறிவு மற்றும் ஐ.ஓ.டி போன்ற வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களில் சிறந்த ப்ராஜெக்ட்கள் செய்ய இந்த வளாகத்தில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து விழாவின் சிறப்பு விருந்தினர் பாலகுமார் பேசும் போது, தொழில் துறையின் தேவைகளைக் கண்டறிந்து அவற்றைத் தகுந்த பாட திட்டங்கள் மற்றும் இது போன்ற ஆய்வகங்கள் மூலம் பூர்த்தி செய்யும் கல்லூரியின் முயற்சியைப் பாராட்டினார்.
மேலும், கல்லூரியின் இயக்குனர் ராஜாராம் பேசும் போது, இந்த வளாகத்தில் சுமார் நூறு பேர் அமர்ந்து ப்ராஜெக்டுகள் செய்ய வசதிகளும், ஐ.ஓ.டி தொழில் நுட்பத்தில் பயிற்சி மற்றும் ப்ராஜெக்டுகள் செய்ய ஒரு பிரத்தியேகப் பிரிவு, தவிர கலந்துரையாடல் அரங்கம் மற்றும் ப்ராஜெக்டுகளை மேற்பார்வை செய்ய ஆசிரியர்களுக்கான அறைகளும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கல்லூரியின் தொழில் துறை நல்லுறவு இயக்குனர், கண்ணன் நரசிம்மன், தொழில் துறையின் தேவைகளைக் கண்டறிந்து பூர்த்தி செய்ய, கல்லூரி தொடர்ந்து எடுத்து வந்துள்ள பல முயற்சிகளைப் பட்டியலிட்டு பேசினார்.
விழாவின் முடிவில் கல்லூரியின் மின்னணு மற்றும் தகவல் பொறியியல் துறையின் பேராசிரியர் சண்முகசுந்தரம் நன்றி கூறினார்.