கோவையில் இதுவரை 9500 மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி - மாவட்ட நிர்வாக அதிகாரி தகவல்!

கோவை: கோவையில் இதுவரை 9500 மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாக அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்தில் இதுவரை 9500 மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, பொதுமக்கள், தொழில்துறையினர், முன்களப்பணியாளர்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள், வியாபாரிகள் போன்ற பலருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே மாவட்டத்தில் இதுவரை 9500 மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில்,

‘‘கோவை மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள். இவர்களில் 9500 பேருக்கு சிறப்பு முகாம்கள் மூலம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மருத்துவர்களின் பரிந்துரைப்படியும், தடுப்பூசி போடும் முன்பு மருத்துவரின் ஆலோசனைப்படியும் தான் இவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. விரைவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் தடுப்பூசி போடப்படும்,’’ என்றார்.

Newsletter

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...