கோவை: கோவையில் இதுவரை 9500 மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாக அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை மாவட்டத்தில் இதுவரை 9500 மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, பொதுமக்கள், தொழில்துறையினர், முன்களப்பணியாளர்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள், வியாபாரிகள் போன்ற பலருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே மாவட்டத்தில் இதுவரை 9500 மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில்,
‘‘கோவை மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள். இவர்களில் 9500 பேருக்கு சிறப்பு முகாம்கள் மூலம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மருத்துவர்களின் பரிந்துரைப்படியும், தடுப்பூசி போடும் முன்பு மருத்துவரின் ஆலோசனைப்படியும் தான் இவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. விரைவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் தடுப்பூசி போடப்படும்,’’ என்றார்.
கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, பொதுமக்கள், தொழில்துறையினர், முன்களப்பணியாளர்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள், வியாபாரிகள் போன்ற பலருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே மாவட்டத்தில் இதுவரை 9500 மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில்,
‘‘கோவை மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள். இவர்களில் 9500 பேருக்கு சிறப்பு முகாம்கள் மூலம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மருத்துவர்களின் பரிந்துரைப்படியும், தடுப்பூசி போடும் முன்பு மருத்துவரின் ஆலோசனைப்படியும் தான் இவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. விரைவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் தடுப்பூசி போடப்படும்,’’ என்றார்.