கோவை குறிச்சி குளக்கரையில் 70 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம், 275 வீடுகளுக்கு நோட்டீஸ்..! மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி

கோவை: கோவை குறிச்சி குளக்கரை பகுதியில் 275 வீடுகளுக்கு நோட்டீஸ், 70 ஆக்கிரமிப்பு வீடுகள் மாநகராட்சி அதிகாரிகளில் இடித்து அகற்றம்.


கோவை: கோவை குறிச்சி குளக்கரை பகுதியில் 275 வீடுகளுக்கு நோட்டீஸ், 70 ஆக்கிரமிப்பு வீடுகள் மாநகராட்சி அதிகாரிகளில் இடித்து அகற்றம்.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட குறிச்சி குளக்கரை பகுதியில் ரூ.52 கோடி மதிப்பில் ஸ்மார்ட் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து, அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணி நேற்று முன்தினம் முதல் நடந்து வருகிறது. இதில், 70 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. மேலும், 275 வீடுகளுக்கு வீடுகளை காலி செய்யக்கோரி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.



இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள்கூறுகையில், 'குறிச்சி குளக்கரை பகுதியில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணி நடைபெற்றது. இதில் சதாம் நகரில் உள்ள 95 ஆக்கிரமிப்பு வீடுகளில், 70 வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. மீதம் உள்ள 25 வீடுகள் அடுத்த வாரம் இடிக்கப்பட உள்ளன. அதே போல், திருவள்ளுவர் நகரில் உள்ள 180 வீடுகள், காந்தி நகரில் உள்ள 95 வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கீரணத்தம், மலுமிச்சம்பட்டி, சரவணம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. நோட்டீஸ் வழங்கப்பட்ட வீடுகள் வரும் 27ம் தேதிக்குள் காலி செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. 28ம் தேதி முதல் வீடுகளை இடிக்கும் பணிகள் மீண்டும் நடைபெறும்,' என்றார்.

Newsletter

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...