கோவை குறிச்சி குளக்கரையில் 70 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம், 275 வீடுகளுக்கு நோட்டீஸ்..! மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி

கோவை: கோவை குறிச்சி குளக்கரை பகுதியில் 275 வீடுகளுக்கு நோட்டீஸ், 70 ஆக்கிரமிப்பு வீடுகள் மாநகராட்சி அதிகாரிகளில் இடித்து அகற்றம்.


கோவை: கோவை குறிச்சி குளக்கரை பகுதியில் 275 வீடுகளுக்கு நோட்டீஸ், 70 ஆக்கிரமிப்பு வீடுகள் மாநகராட்சி அதிகாரிகளில் இடித்து அகற்றம்.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட குறிச்சி குளக்கரை பகுதியில் ரூ.52 கோடி மதிப்பில் ஸ்மார்ட் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து, அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணி நேற்று முன்தினம் முதல் நடந்து வருகிறது. இதில், 70 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. மேலும், 275 வீடுகளுக்கு வீடுகளை காலி செய்யக்கோரி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.



இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள்கூறுகையில், 'குறிச்சி குளக்கரை பகுதியில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணி நடைபெற்றது. இதில் சதாம் நகரில் உள்ள 95 ஆக்கிரமிப்பு வீடுகளில், 70 வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. மீதம் உள்ள 25 வீடுகள் அடுத்த வாரம் இடிக்கப்பட உள்ளன. அதே போல், திருவள்ளுவர் நகரில் உள்ள 180 வீடுகள், காந்தி நகரில் உள்ள 95 வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கீரணத்தம், மலுமிச்சம்பட்டி, சரவணம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. நோட்டீஸ் வழங்கப்பட்ட வீடுகள் வரும் 27ம் தேதிக்குள் காலி செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. 28ம் தேதி முதல் வீடுகளை இடிக்கும் பணிகள் மீண்டும் நடைபெறும்,' என்றார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...