கோவை: கோவை அருகே மளிகைக் கடை வைத்து வியாபாரம் செய்து வரக்கூடிய வியாபாரி வீட்டில் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த நகை பணம் கொள்ளை அடிக்கப்பட்டது.
கோவை: கோவை அருகே மளிகைக் கடை வைத்து வியாபாரம் செய்து வரக்கூடிய வியாபாரி வீட்டில் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த நகை பணம் கொள்ளை அடிக்கப்பட்டது.
இதுகுறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கோவை நீலம்பூர் காந்தி நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் இவரது மனைவி கிருஷ்ணா வயது 39, இவர் அதே பகுதியில் மளிகைக் கடை வைத்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று இவர் வீட்டைப் பூட்டி விட்டு பீளமேட்டில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றார்.
பின்னர் மாலையில் வீட்டுக்குத் திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அறையிலிருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த 4-பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து கிருஷ்ணா குமாரி சூலூர் போலீசில் புகார் தெரிவித்தார். காவல்துறை மற்றும் கைரேகை நிபுணர்கள் வீட்டிற்குச் சென்று அங்குப் பதிவாகி இருந்த கைரேகைகளைப் பதிவு செய்தனர்.
இதையடுத்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை அடித்த கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கோவை நீலம்பூர் காந்தி நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் இவரது மனைவி கிருஷ்ணா வயது 39, இவர் அதே பகுதியில் மளிகைக் கடை வைத்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று இவர் வீட்டைப் பூட்டி விட்டு பீளமேட்டில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றார்.
பின்னர் மாலையில் வீட்டுக்குத் திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அறையிலிருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த 4-பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து கிருஷ்ணா குமாரி சூலூர் போலீசில் புகார் தெரிவித்தார். காவல்துறை மற்றும் கைரேகை நிபுணர்கள் வீட்டிற்குச் சென்று அங்குப் பதிவாகி இருந்த கைரேகைகளைப் பதிவு செய்தனர்.
இதையடுத்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை அடித்த கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.