மளிகை கடைக்காரர் வீட்டை உடைத்து நகை, பணம் திருட்டு கைவரிசை காட்டிய கொள்ளையர்களுக்கு வலைவீச்சு.!!

கோவை: கோவை அருகே மளிகைக் கடை வைத்து வியாபாரம் செய்து வரக்கூடிய வியாபாரி வீட்டில் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த நகை பணம் கொள்ளை அடிக்கப்பட்டது.


கோவை: கோவை அருகே மளிகைக் கடை வைத்து வியாபாரம் செய்து வரக்கூடிய வியாபாரி வீட்டில் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த நகை பணம் கொள்ளை அடிக்கப்பட்டது.

இதுகுறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

கோவை நீலம்பூர் காந்தி நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் இவரது மனைவி கிருஷ்ணா வயது 39, இவர் அதே பகுதியில் மளிகைக் கடை வைத்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில் நேற்று இவர் வீட்டைப் பூட்டி விட்டு பீளமேட்டில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றார்.

பின்னர் மாலையில் வீட்டுக்குத் திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அறையிலிருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த 4-பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து கிருஷ்ணா குமாரி சூலூர் போலீசில் புகார் தெரிவித்தார். காவல்துறை மற்றும் கைரேகை நிபுணர்கள் வீட்டிற்குச் சென்று அங்குப் பதிவாகி இருந்த கைரேகைகளைப் பதிவு செய்தனர்.

இதையடுத்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை அடித்த கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...