வால்பாறையில் கரடி தொழிலாளர்களைத் தாக்கிய சம்பவத்தைத் தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளில் உள்ள புதர்கள் அகற்றும் பணிகள் தீவிரம்.!!

வால்பாறை: வால்பாறையில் கரடி தொழிலாளர்களைத் தாக்கிய சம்பவத்தைத் தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளில் உள்ள புதர்கள் அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


வால்பாறை: வால்பாறையில் கரடி தொழிலாளர்களைத் தாக்கிய சம்பவத்தைத் தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளில் உள்ள புதர்கள் அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டம் வால்பாறையில் வில்லோனி தேயிலைத் தோட்டத்தில் கரடி தாக்கி தொழிலாளி மோகன்ராஜ் என்பவர் உயிரிழந்தார். இந்நிலையில் மீண்டும் ஒரு தொழிலாளியைக் கரடி தாக்கியுள்ளது.

வால்பாறையை அடுத்த அய்யர் பாடி இரண்டாம் டிவிசனை சேர்ந்த வசந்த பிரபாகரன் கரடியால் தாக்கப்பட்டு கோவையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் மீண்டும் கவர்க்கல் தேயிலைத் தோட்டத்தில் சேகர் என்பவர் கரடியால் தாக்கப்பட்டு கோவையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனைத் தொடர்ந்து குடியிருப்புகளுக்கு அருகிலுள்ள புதர்களை உடனடியாக அகற்றும்படி நிர்வாகத்திற்கு வனத்துறையினர் அறிவுறுத்தி இருந்தனர்.



வனத்துறையினரின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து வில்லோனி தேயிலைத் தோட்டத்தில் குடியிருப்பு பகுதியில் உள்ள அனைத்து புதர்களும் அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் கரடிகளுக்குப் பிடித்த உணவான பலா மரங்களில் உள்ள காய்கள் பழங்கள் வெட்டி அகற்றப்பட்டு வருகின்றன. பழ மரங்களை அகற்றும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

Newsletter

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...