வால்பாறை: வால்பாறையில் கரடி தொழிலாளர்களைத் தாக்கிய சம்பவத்தைத் தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளில் உள்ள புதர்கள் அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வால்பாறை: வால்பாறையில் கரடி தொழிலாளர்களைத் தாக்கிய சம்பவத்தைத் தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளில் உள்ள புதர்கள் அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோவை மாவட்டம் வால்பாறையில் வில்லோனி தேயிலைத் தோட்டத்தில் கரடி தாக்கி தொழிலாளி மோகன்ராஜ் என்பவர் உயிரிழந்தார். இந்நிலையில் மீண்டும் ஒரு தொழிலாளியைக் கரடி தாக்கியுள்ளது.
வால்பாறையை அடுத்த அய்யர் பாடி இரண்டாம் டிவிசனை சேர்ந்த வசந்த பிரபாகரன் கரடியால் தாக்கப்பட்டு கோவையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் மீண்டும் கவர்க்கல் தேயிலைத் தோட்டத்தில் சேகர் என்பவர் கரடியால் தாக்கப்பட்டு கோவையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனைத் தொடர்ந்து குடியிருப்புகளுக்கு அருகிலுள்ள புதர்களை உடனடியாக அகற்றும்படி நிர்வாகத்திற்கு வனத்துறையினர் அறிவுறுத்தி இருந்தனர்.

வனத்துறையினரின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து வில்லோனி தேயிலைத் தோட்டத்தில் குடியிருப்பு பகுதியில் உள்ள அனைத்து புதர்களும் அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும் கரடிகளுக்குப் பிடித்த உணவான பலா மரங்களில் உள்ள காய்கள் பழங்கள் வெட்டி அகற்றப்பட்டு வருகின்றன. பழ மரங்களை அகற்றும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
கோவை மாவட்டம் வால்பாறையில் வில்லோனி தேயிலைத் தோட்டத்தில் கரடி தாக்கி தொழிலாளி மோகன்ராஜ் என்பவர் உயிரிழந்தார். இந்நிலையில் மீண்டும் ஒரு தொழிலாளியைக் கரடி தாக்கியுள்ளது.
வால்பாறையை அடுத்த அய்யர் பாடி இரண்டாம் டிவிசனை சேர்ந்த வசந்த பிரபாகரன் கரடியால் தாக்கப்பட்டு கோவையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் மீண்டும் கவர்க்கல் தேயிலைத் தோட்டத்தில் சேகர் என்பவர் கரடியால் தாக்கப்பட்டு கோவையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனைத் தொடர்ந்து குடியிருப்புகளுக்கு அருகிலுள்ள புதர்களை உடனடியாக அகற்றும்படி நிர்வாகத்திற்கு வனத்துறையினர் அறிவுறுத்தி இருந்தனர்.
வனத்துறையினரின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து வில்லோனி தேயிலைத் தோட்டத்தில் குடியிருப்பு பகுதியில் உள்ள அனைத்து புதர்களும் அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும் கரடிகளுக்குப் பிடித்த உணவான பலா மரங்களில் உள்ள காய்கள் பழங்கள் வெட்டி அகற்றப்பட்டு வருகின்றன. பழ மரங்களை அகற்றும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.