கோவை: தொண்டாமுத்தூரில் சுதந்திர தினத்தில் கொடி ஏற்றாத பிரச்சனை காரணமாக ஊராட்சி செயலாளரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
கோவை: தொண்டாமுத்தூரில் சுதந்திர தினத்தில் கொடி ஏற்றாத பிரச்சனை காரணமாக ஊராட்சி செயலாளரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள ஜாகீர் நாயக்கன் பாளையத்தில் சுதந்திர தினத்தில் கொடி ஏற்றாத பிரச்சனை காரணமாக ஊராட்சி செயலாளர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு புதிய ஊராட்சி செயலாளர் பதவி ஏற்றுக் கொண்டார்.
தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஜாகீர் நாயக்கன் பாளையம் ஊராட்சி தலைவராக அதிமுகவைச் சேர்ந்த அன்னபூரணி துரைசாமி உள்ளார்.
கடந்த 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று ஜாகீர் நாயக்கன் பாளையம் ஊராட்சி அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றப்படவில்லை. தொடர்பாக அதிமுக ஊராட்சி செயலாளர் ரங்கராஜ், வார்டு உறுப்பினர்கள் ராமசாமி சுஜாதா பழனிச்சாமி ஆகியோர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுத்தனர்.
இந்த நிலையில், ஆட்சியரின் உத்தரவின் பேரில் ஊராட்சி செயலாளர் காஜா மைதீன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக புதிய ஊராட்சி செயலாளராக பரமேசுவரி என்பவரை நியமனம் செய்து நேற்று அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள ஜாகீர் நாயக்கன் பாளையத்தில் சுதந்திர தினத்தில் கொடி ஏற்றாத பிரச்சனை காரணமாக ஊராட்சி செயலாளர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு புதிய ஊராட்சி செயலாளர் பதவி ஏற்றுக் கொண்டார்.
தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஜாகீர் நாயக்கன் பாளையம் ஊராட்சி தலைவராக அதிமுகவைச் சேர்ந்த அன்னபூரணி துரைசாமி உள்ளார்.
கடந்த 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று ஜாகீர் நாயக்கன் பாளையம் ஊராட்சி அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றப்படவில்லை. தொடர்பாக அதிமுக ஊராட்சி செயலாளர் ரங்கராஜ், வார்டு உறுப்பினர்கள் ராமசாமி சுஜாதா பழனிச்சாமி ஆகியோர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுத்தனர்.
இந்த நிலையில், ஆட்சியரின் உத்தரவின் பேரில் ஊராட்சி செயலாளர் காஜா மைதீன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக புதிய ஊராட்சி செயலாளராக பரமேசுவரி என்பவரை நியமனம் செய்து நேற்று அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.