கோவை: கோவை மத்திய சிறையை மாற்றி பூங்கா உருவாக்கப்படும்; எம்.எல். ஏ வானதி சீனிவாசன் கோரிக்கைக்கு முதல்வர் பதில்.
கோவை: கோவை மத்திய சிறையை மாற்றி அங்கு பூங்கா உருவாக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர், கடந்த 13ம் தேதி துவங்கியது.கூட்டத்தொடரில் பங்கேற்ற பாஜகவின் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர், வானதி சீனிவாசன் கோவையில் உள்ள மத்திய சிறைச்சாலையை இடம்மாற்றி அந்து ஒரு பூங்கா அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
இதற்கு பதிலளித்த முதல்வர், கடந்த
2010 ஜூன் 23 முதல் 27ம் தேதி வரை கோவையில் நடைபெற்றஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின், நினைவாக கோவை மாநகரத்தின் மையப் பகுதியில் உள்ள மத்திய சிறைச்சாலை இருக்கும் இடத்தில் உலகத் தரத்தில் தாவரவியல் பூங்கா அமைக்கப்படும் என்றும் மத்திய சிறைச்சாலை படிப்படியாக வேறு இடத்துக்கு மாற்றப்படும் என்று, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அறிவித்திருந்தார்.
ஆனால், அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசால் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. கடந்த 10 ஆண்டு காலமாக திட்டம் குறித்து எந்த முயற்சியும் செய்யப்படவில்லை. இந்த நிலையில், திமுக அரசு, கோவை மத்திய சிறைச்சாலை உள்ள இடத்தில் சர்வதேச தரத்தில் பூங்கா அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தும்என்று சட்டன்ற உறுப்பினர், வானதி சீனிவாசனின் கோரிக்கைக்கு முதல்வர் பதில் அளித்துள்ளார்.
'கடந்த 10 ஆண்டு காலம் அதிமுக அத்திட்டத்தை பற்றி யோசிக்கவில்லை, சிந்திக்கவில்லை. எனவே, உங்களுடைய கோரிக்கை இந்த ஆட்சியில் நிச்சயமாக நிறைவேற்றப்படும்' என்று முதல்வர் முக. ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.