குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்: 2-பேர் மீது வழக்கு பதிவு சமூக நலத்துறை அதிகாரிகள் அதிரடி.!!

கோவை: கோவை மாவட்ட புறநகர்ப் பகுதிகளில் கடந்த ஜூலை மாதத்தில் சமூக நலத்துறை அதிகாரிகள் மூலம் தடுத்து நிறுத்தப்பட்ட குழந்தை திருமணங்கள் தொடர்பாக 2-பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்ட புறநகர்ப் பகுதிகளில் கடந்த ஜூலை மாதத்தில் சமூக நலத்துறை அதிகாரிகள் மூலம் தடுத்து நிறுத்தப்பட்ட குழந்தை திருமணங்கள் தொடர்பாக 2-பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் தெரிவித்திருப்பதாவது:-

இந்தியாவில் பெண்களுக்கு 19-வயதும் ஆண்களுக்கு 21-வயதும் திருமணத்திற்கான சட்ட பூர்வ வயதாக உள்ளது. இந்த வயதுகளின் கீழ் நடைபெறும் எந்த திருமணமும் சட்டத்தை மீறும் செயலாகக் கருதப்படுகிறது. குழந்தை திருமணம் நடத்துவோர் மற்றும் ஊக்குவிப்பவர்களுக்கு சட்டப்படி தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் சைல்டு லைன் மூலம் குழந்தை திருமணம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து குழந்தை திருமணத்தில் ஈடுபட்ட மதுக்கரை வட்டாரம் வெள்ளலூர் பகுதியைச் சார்ந்த நேதாஜி மற்றும் கருமத்தம் பட்டி குளத்துப்பாளையம்

கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் (எ) பழனிசாமி ஆகிய 2 நபர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் மீது சமூகநலத்துறை மூலம் காவல்நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், காரமடை ஊராட்சி மருதூர் கிராமத்தைச் சேர்ந்த புஷ்ப ராஜ் என்பவர் மீதும் சி.எஸ்.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தை திருமணம் தொடர்பாகப் புகார் அளிக்க 1098 என்கிற இலவச எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...