குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்: 2-பேர் மீது வழக்கு பதிவு சமூக நலத்துறை அதிகாரிகள் அதிரடி.!!

கோவை: கோவை மாவட்ட புறநகர்ப் பகுதிகளில் கடந்த ஜூலை மாதத்தில் சமூக நலத்துறை அதிகாரிகள் மூலம் தடுத்து நிறுத்தப்பட்ட குழந்தை திருமணங்கள் தொடர்பாக 2-பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்ட புறநகர்ப் பகுதிகளில் கடந்த ஜூலை மாதத்தில் சமூக நலத்துறை அதிகாரிகள் மூலம் தடுத்து நிறுத்தப்பட்ட குழந்தை திருமணங்கள் தொடர்பாக 2-பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் தெரிவித்திருப்பதாவது:-

இந்தியாவில் பெண்களுக்கு 19-வயதும் ஆண்களுக்கு 21-வயதும் திருமணத்திற்கான சட்ட பூர்வ வயதாக உள்ளது. இந்த வயதுகளின் கீழ் நடைபெறும் எந்த திருமணமும் சட்டத்தை மீறும் செயலாகக் கருதப்படுகிறது. குழந்தை திருமணம் நடத்துவோர் மற்றும் ஊக்குவிப்பவர்களுக்கு சட்டப்படி தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் சைல்டு லைன் மூலம் குழந்தை திருமணம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து குழந்தை திருமணத்தில் ஈடுபட்ட மதுக்கரை வட்டாரம் வெள்ளலூர் பகுதியைச் சார்ந்த நேதாஜி மற்றும் கருமத்தம் பட்டி குளத்துப்பாளையம்

கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் (எ) பழனிசாமி ஆகிய 2 நபர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் மீது சமூகநலத்துறை மூலம் காவல்நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், காரமடை ஊராட்சி மருதூர் கிராமத்தைச் சேர்ந்த புஷ்ப ராஜ் என்பவர் மீதும் சி.எஸ்.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தை திருமணம் தொடர்பாகப் புகார் அளிக்க 1098 என்கிற இலவச எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...