கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் ரியல் எஸ்டேட் ஊழியருக்கு கத்திக்குத்து - போலீசார் விசாரணை!

கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் ரியல் எஸ்டேட் ஊழியரை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் ரியல் எஸ்டேட் ஊழியரை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை ஜோதி புரத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணபிரசாத் (42). இவர் ஒரு தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது சகோதரி மற்றும் அவரது கணவர் பிரான்சிஸ் சேவியர் இடையே கருத்து வேறுபாடு இருந்துள்ளது.

இந்நிலையில், கிருஷ்ணபிரசாத் சகோதரி விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் விண்ணப்பித்து இருந்தார். இதற்கு கிருஷ்ணபிரசாத் உதவி செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு பிரான்சிஸ் சேவியர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று கிருஷ்ணபிரசாத் ஆர்.எஸ் புரம், டி.பி சாமி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த பிரான்சிஸ் சேவியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மேலும், ஆத்திரமடைந்த அவர் தான் கொண்டு வந்து இருந்த கத்தியை எடுத்து கிருஷ்ணபிரசாத்தை குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

பின்னர், ரத்த வெள்ளத்தில் துடித்த கிருஷ்ணபிரசாத் அந்த பகுதி பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...