கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் ரியல் எஸ்டேட் ஊழியருக்கு கத்திக்குத்து - போலீசார் விசாரணை!

கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் ரியல் எஸ்டேட் ஊழியரை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் ரியல் எஸ்டேட் ஊழியரை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை ஜோதி புரத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணபிரசாத் (42). இவர் ஒரு தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது சகோதரி மற்றும் அவரது கணவர் பிரான்சிஸ் சேவியர் இடையே கருத்து வேறுபாடு இருந்துள்ளது.

இந்நிலையில், கிருஷ்ணபிரசாத் சகோதரி விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் விண்ணப்பித்து இருந்தார். இதற்கு கிருஷ்ணபிரசாத் உதவி செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு பிரான்சிஸ் சேவியர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று கிருஷ்ணபிரசாத் ஆர்.எஸ் புரம், டி.பி சாமி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த பிரான்சிஸ் சேவியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மேலும், ஆத்திரமடைந்த அவர் தான் கொண்டு வந்து இருந்த கத்தியை எடுத்து கிருஷ்ணபிரசாத்தை குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

பின்னர், ரத்த வெள்ளத்தில் துடித்த கிருஷ்ணபிரசாத் அந்த பகுதி பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...