கடந்த 2-மாதங்களில் 2-டன் 'கோவிஷீல்டு' மற்றும் 'கோவாக்சின் தடுப்பூசிகள் 'இண்டிகோ' விமானங்களில் கோவைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல்.!!

கோவை: கடந்த 2 மாதங்களில் 2 டன் 'கோவிஷீல்டு' மற்றும் 'கோவாக்சின் தடுப்பூசிகள் 'இண்டிகோ' விமானங்களில் கோவைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.


கோவை: கடந்த 2 மாதங்களில் 2 டன் 'கோவிஷீல்டு' மற்றும் 'கோவாக்சின் தடுப்பூசிகள் 'இண்டிகோ' விமானங்களில் கோவைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

கொரோனா நோய்த்தொற்று தடுப்பூசிகளுக்கான தேவை அதிகரித்து வரும் சூழலில், இவற்றைக் கொண்டு வருவதில் விமானங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவல் முதல் அலை மற்றும் இரண்டாவது அலை பரவலின் போது பல்வேறு மருத்துவ உபகரணங்கள், பாதுகாப்பு கருவிகள் மற்றும் உபகரணங்கள் விமானங்கள் மூலம் கோவைக்குக் கொண்டு வரப்பட்டன.

நோய்த்தொற்று தடுப்பூசி சென்னையிலிருந்து முன்பு சாலை வழியாக அதிக அளவில் கொண்டுவரப்பட்டன. மக்களிடம் விழிப்புணர்வு அதிகரித்த காரணத்தால் கடந்த இரண்டு மாதங்களாகத் தடுப்பூசிகளுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதன்காரணமாக சாலை வழியாக மட்டுமின்றி விமானங்கள் மூலமும் தடுப்பூசிகள் கோவைக்குக் கொண்டு வருவது அதிகரித்துள்ளன.

விமான நிலைய வட்டாரங்கள் கூறியதாவது:-

கோவை விமான நிலையம் சுற்றுப்புறங்களைச் சேர்ந்த 7 மாவட்ட மக்களுக்குப் பயன் அளித்து வருவதைக் கருத்தில் கொண்டு விமானங்களில் தடுப்பூசிகளைக் கொண்டுவருவது அதிகரிக்கப்பட்டுள்ளது.

'இண்டிகோ' ஏர்லைன்ஸ் சார்பில் மும்பை, ஹைதராபாத், சென்னை மற்றும் பூனே நகரங்களிலிருந்து அதிக அளவு தடுப்பூசிகள் கோவைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் இரண்டுடன் எடையிலான 'கோவிஷீல்டு' மற்றும் 'கோவாக்சின்' தடுப்பூசிகள் 'இண்டிகோ' விமானங்களில் கோவை விமான நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

எதிர்வரும் மாதங்களிலும் விமானங்களில் தடுப்பூசி கொண்டு வரப்படுவது தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு, ஏர்போர்ட் வட்டாரங்கள் தெரிவித்தன.

Newsletter

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...