கோவை: கடந்த 2 மாதங்களில் 2 டன் 'கோவிஷீல்டு' மற்றும் 'கோவாக்சின் தடுப்பூசிகள் 'இண்டிகோ' விமானங்களில் கோவைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
கோவை: கடந்த 2 மாதங்களில் 2 டன் 'கோவிஷீல்டு' மற்றும் 'கோவாக்சின் தடுப்பூசிகள் 'இண்டிகோ' விமானங்களில் கோவைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
கொரோனா நோய்த்தொற்று தடுப்பூசிகளுக்கான தேவை அதிகரித்து வரும் சூழலில், இவற்றைக் கொண்டு வருவதில் விமானங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
கோவை சர்வதேச விமான நிலையத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவல் முதல் அலை மற்றும் இரண்டாவது அலை பரவலின் போது பல்வேறு மருத்துவ உபகரணங்கள், பாதுகாப்பு கருவிகள் மற்றும் உபகரணங்கள் விமானங்கள் மூலம் கோவைக்குக் கொண்டு வரப்பட்டன.
நோய்த்தொற்று தடுப்பூசி சென்னையிலிருந்து முன்பு சாலை வழியாக அதிக அளவில் கொண்டுவரப்பட்டன. மக்களிடம் விழிப்புணர்வு அதிகரித்த காரணத்தால் கடந்த இரண்டு மாதங்களாகத் தடுப்பூசிகளுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதன்காரணமாக சாலை வழியாக மட்டுமின்றி விமானங்கள் மூலமும் தடுப்பூசிகள் கோவைக்குக் கொண்டு வருவது அதிகரித்துள்ளன.
விமான நிலைய வட்டாரங்கள் கூறியதாவது:-
கோவை விமான நிலையம் சுற்றுப்புறங்களைச் சேர்ந்த 7 மாவட்ட மக்களுக்குப் பயன் அளித்து வருவதைக் கருத்தில் கொண்டு விமானங்களில் தடுப்பூசிகளைக் கொண்டுவருவது அதிகரிக்கப்பட்டுள்ளது.
'இண்டிகோ' ஏர்லைன்ஸ் சார்பில் மும்பை, ஹைதராபாத், சென்னை மற்றும் பூனே நகரங்களிலிருந்து அதிக அளவு தடுப்பூசிகள் கோவைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் இரண்டுடன் எடையிலான 'கோவிஷீல்டு' மற்றும் 'கோவாக்சின்' தடுப்பூசிகள் 'இண்டிகோ' விமானங்களில் கோவை விமான நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.
எதிர்வரும் மாதங்களிலும் விமானங்களில் தடுப்பூசி கொண்டு வரப்படுவது தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு, ஏர்போர்ட் வட்டாரங்கள் தெரிவித்தன.
கொரோனா நோய்த்தொற்று தடுப்பூசிகளுக்கான தேவை அதிகரித்து வரும் சூழலில், இவற்றைக் கொண்டு வருவதில் விமானங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
கோவை சர்வதேச விமான நிலையத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவல் முதல் அலை மற்றும் இரண்டாவது அலை பரவலின் போது பல்வேறு மருத்துவ உபகரணங்கள், பாதுகாப்பு கருவிகள் மற்றும் உபகரணங்கள் விமானங்கள் மூலம் கோவைக்குக் கொண்டு வரப்பட்டன.
நோய்த்தொற்று தடுப்பூசி சென்னையிலிருந்து முன்பு சாலை வழியாக அதிக அளவில் கொண்டுவரப்பட்டன. மக்களிடம் விழிப்புணர்வு அதிகரித்த காரணத்தால் கடந்த இரண்டு மாதங்களாகத் தடுப்பூசிகளுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதன்காரணமாக சாலை வழியாக மட்டுமின்றி விமானங்கள் மூலமும் தடுப்பூசிகள் கோவைக்குக் கொண்டு வருவது அதிகரித்துள்ளன.
விமான நிலைய வட்டாரங்கள் கூறியதாவது:-
கோவை விமான நிலையம் சுற்றுப்புறங்களைச் சேர்ந்த 7 மாவட்ட மக்களுக்குப் பயன் அளித்து வருவதைக் கருத்தில் கொண்டு விமானங்களில் தடுப்பூசிகளைக் கொண்டுவருவது அதிகரிக்கப்பட்டுள்ளது.
'இண்டிகோ' ஏர்லைன்ஸ் சார்பில் மும்பை, ஹைதராபாத், சென்னை மற்றும் பூனே நகரங்களிலிருந்து அதிக அளவு தடுப்பூசிகள் கோவைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் இரண்டுடன் எடையிலான 'கோவிஷீல்டு' மற்றும் 'கோவாக்சின்' தடுப்பூசிகள் 'இண்டிகோ' விமானங்களில் கோவை விமான நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.
எதிர்வரும் மாதங்களிலும் விமானங்களில் தடுப்பூசி கொண்டு வரப்படுவது தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு, ஏர்போர்ட் வட்டாரங்கள் தெரிவித்தன.