தேர்தலில் கொடுத்த இரண்டாவது வாக்குறுதி நிறைவேற்றம்: சிங்காநல்லூரில் புதிய 'இ சேவை மையம்' துவக்கம்.!!

கோவை: சிங்காநல்லூரில் புதிய 'இ சேவை மையம்' மையத்தை சட்டமன்ற உறுப்பினர் ஜெயராம் துவக்கி வைத்தார்.


கோவை: சிங்காநல்லூரில் புதிய 'இ சேவை மையம்' மையத்தை சட்டமன்ற உறுப்பினர் ஜெயராம் துவக்கி வைத்தார்.

கோவை மாவட்டம் சிங்காநல்லூரில் புதிய இ-சேவை மையம், இளைஞர்களுக்கு கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கல், மலை ஏற்ற வீரருக்கு நிதி உதவி, மரக்கன்று நடுதல் என்பது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் 'அதிமுக' சட்டமன்ற உறுப்பினர்., ஜெயராம் பங்கேற்றார்.

இதுகுறித்து சட்டமன்ற உறுப்பினர் ஜெயராம் கூறியதாவது:-



சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் பணியாற்ற வாய்ப்பு அளித்த மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி. தேர்தலின் போது மக்களுக்கு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.

முதல் கட்டமாக பொதுப் பிரச்சினைகள் குறித்து மக்கள் தகவல் தெரிவிக்க உதவும் வகையில் 'வாட்ஸ் அப் எண்' அறிமுகம் செய்யப்பட்டது. மக்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது.

தெரு விளக்கு எரியவில்லை, சாக்கடை கால்வாய் பிரச்சினை உள்ளிட்ட புகார்களுக்கு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. தவிர பல்வேறு கோரிக்கைகள் குறித்து மாநகராட்சியின் கவனத்திற்கு அவற்றைக் கொண்டு பிரச்சனைகளுக்குத் தீர்வு காண நடவடிக்கை மேற்கொண்டு வருகிறேன்.



75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நேற்று சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கொடி ஏற்றி வைத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.



இதைத்தொடர்ந்து, இரண்டாவது தேர்தல் வாக்குறுதி 'இ சேவை மையம்' நேற்று திறக்கப்பட்டது.



இது தவிர இளைஞர்களுக்கு கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கப்பட்டன. மலையேற்ற வீரர் ஒருவருக்கு சொந்த நிதியிலிருந்து நிதி உதவி வழங்கி உள்ளேன்.



சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட சவுரி பாளையம் பகுதியில் உள்ள உடையாம்பாளையம் அரசுப் பள்ளியில், சிலம்பாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டன.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...