கோவை: வால்பாறையில் சேடல்டேம் பகுதியில் 75வது சுதந்திர தின விழாவை கொண்டாட்டத்தில் முன் கள பணியாளர்களுக்கு பாராட்டு தெரிவித்து கவுரவிக்கப்பட்டது.
கோவை: வால்பாறையில் சேடல்டேம் பகுதியில் 75வது சுதந்திர தின விழாவை கொண்டாட்டத்தில் முன் கள பணியாளர்களுக்கு பாராட்டு தெரிவித்து கவுரவிக்கப்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சேடல்டேம் பகுதியில் நாட்டின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக சேக்கல் முடி உதவி ஆய்வாளர் முத்துராஜ் கலந்துகொண்டு கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் சேடல் டேம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பியூலா, துணை ஆசிரியர், பண்ணி மேடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமையாசிரியர், சோலையார் டேம் அரசு மருத்துவமனை செவிலியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் முன் களப்பணியாளர்கள், காவலர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், ஆசிரியர் பெரு மக்கள் ஆகியோர்களின் பணிசிறக்க அனைவரையும் கௌரவிக்கப்பட்டனர்.

மேலும், விழாவில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பேச்சு போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சேடல்டேம் பகுதியில் நாட்டின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக சேக்கல் முடி உதவி ஆய்வாளர் முத்துராஜ் கலந்துகொண்டு கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் சேடல் டேம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பியூலா, துணை ஆசிரியர், பண்ணி மேடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமையாசிரியர், சோலையார் டேம் அரசு மருத்துவமனை செவிலியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் முன் களப்பணியாளர்கள், காவலர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், ஆசிரியர் பெரு மக்கள் ஆகியோர்களின் பணிசிறக்க அனைவரையும் கௌரவிக்கப்பட்டனர்.
மேலும், விழாவில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பேச்சு போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.