கோவை: கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் நேற்று நள்ளிரவு கோவையிலிருந்து பொள்ளாச்சி வரை ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
கோவை: கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் நேற்று நள்ளிரவு கோவையிலிருந்து பொள்ளாச்சி வரை ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது நள்ளிரவு நேரத்தில் கிணத்துக்கடவு மேம்பால பகுதியில் தனியாக நின்று கொண்டிருந்தார். காரைக் கண்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம், அந்தக் கார் அருகே சென்று பார்த்தபோது வாலிபர் ஒருவர் மது போதையில் காரில் இருந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து மைக் மூலம் கிணத்துக்கடவு காவல் நிலையத்திற்கு காவல்துறை கண்காணிப்பாளர் தகவல் கொடுத்தார்.
பின்னர், சம்பவ இடத்துக்கு வந்த கிணத்துக்கடவு காவல்துறை உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி காரில் மது போதையிலிருந்த வாலிபரை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் அந்த வாலிபர் பொள்ளாச்சி மகாலிங்க புரம் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் பிரசாத் (வயது 28 ) என்பது தெரியவந்தது
அந்த வாலிபர் மது போதையிலிருந்ததால் அவர் மீது குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக மோட்டார் வாகன சட்டத்தின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டது
பின்னர், வாலிபர் வந்த காரை பறிமுதல் செய்த காவல்துறை கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.
இதுகுறித்து கிணத்துக்கடவு காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.