கோவை வருமான வரி அலுவலகத்தில் 75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்.!! சேவை புரிந்த 15-பேருக்கு விருதுகள், சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு.!!

கோவை: கோவை தலைமை வருமான வரி அலுவலகத்தில் 75-ஆவது சுதந்திர தின விழா கொடியேற்றி இனிப்பு வழங்கி பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி கொண்டாடப்பட்டது.


கோவை: கோவை தலைமை வருமான வரி அலுவலகத்தில் 75-ஆவது சுதந்திர தின விழா கொடியேற்றி இனிப்பு வழங்கி பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி கொண்டாடப்பட்டது.

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் வருமான வரித்துறையுடைய தலைமை ஆணையர் அலுவலகம் உள்ளது. இன்று அலுவலகத்தில் வைத்துக் கொடியேற்று விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மேற்கு மண்டல தலைமை கமிஷனர் பூபால் ரெட்டி தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏற்றி வைத்து வைத்தார். டாக்டர் சுந்தரேசன் கூடுதல் ஆணையர் வரவேற்புரை வழங்கினார்.



வருமானவரித்துறை என்னுடைய முன்னாள் சேர்மன் மூர்த்தி, திருப்பூர் தொழிலதிபர் பத்மஸ்ரீ சக்திவேல் தலைமை நரம்பியல் நிபுணர் வேணி ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கொரோனா தொற்றின் போது போது கோவை வருமான வரித்துறை சார்பாக பணங்கள் சேகரித்து 100-க்கும் மேற்பட்ட மக்களுக்கு உதவி செய்யப்பட்டது.

இதேபோல 15-லட்ச ரூபாய் மதிப்பிலான மருத்துவ கருவிகள் ஆக்சிஜன் சிலிண்டர மற்றும் கையுறை, சானிடைசர், மாஸ்க்குகள் உட்படச் சுகாதார பாதுகாப்பு உபகரணங்கள் கோவை அரசு இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.

இதுபோன்று இக்கட்டான சூழ்நிலையில் பொதுமக்களைக் காக்கும் பொருட்டு சேவையாற்றிய 15-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு பூபால் ரெட்டி அவர்கள் பாராட்டுச் சான்றிதழையும் பழக்கங்களையும் வழங்கினார்.

தொடர்ந்து வருமான வரித்துறை அலுவலர்கள் உடைய குடும்பங்கள் கலந்துகொண்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதில் தேசப்பற்றை வலியுறுத்தக் கூடிய பாடல்களைக் குழந்தைகள் பாடின, இதைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இறுதியாக டாக்டர் கண்ணன் துணை ஆணையர் வருமான வரித்துறை நன்றியுரை வழங்கினார்.

Newsletter

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...