கோவையில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்..! 7 மாற்றுத்திறனுடைய குழந்தைகள் பள்ளியில் சேர்ப்பு!

கோவை: கோவையில் 6 வயது முதல் 19 வயது வரை பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனுடைய குழந்தைகளை கண்டறியும் கணக்கெடுப்பு பணியானது கடந்த 10ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.


கோவை: கோவையில் 6 வயது முதல் 19 வயது வரை பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனுடைய குழந்தைகளை கண்டறியும் கணக்கெடுப்பு பணியானது கடந்த 10ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்த பணி வரும் 31ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், இக்கணக்கெடுப்பு பணியில் ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள், தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் இடைநின்ற குழந்தைகளின் வீட்டு முகவரிக்குச் சென்று, அருகாமையில் உள்ள பள்ளிகளில் சேர்க்கப்பட்டு, பின்னர் இதற்கான செயலியில் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதில் மாணவரின் பெயர், விலாசம், இடைநின்ற விவரங்கள் மற்றும் கொரோனாவினால் தாய், தந்தையர்களை இழந்துள்ளனரா? என்ற விவரமும் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

மேலும், புதியதாக கண்டறியப்படும் இடம் பெயர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனுடைய மாணவர்களையும் அருகாமையிலுள்ள பள்ளியில் சேர்க்கப்படவுள்ளனர். இக்கணக்கெடுப்பு பணியின் அனைத்து விதமான குழந்தைகளும் பயனடைவார்கள்.

இதனிடையே, தற்போது வரை 7 மாற்றுத்திறனுடைய மாணவர்கள் கண்டறியப்பட்டு பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Newsletter

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...