கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பைக் திருட்டில் ஈடுபட்ட வாலிபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பைக் திருட்டில் ஈடுபட்ட வாலிபர்கள் இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் நவ்ஷாத் (38), அதே பகுதியில் லேத் வொர்க் ஷாப் நடத்தி வருகிறார். இந்நிலையில், இவர் நேற்று முன்தினம் பொள்ளாச்சி காந்தி சிலை சிக்னல் அருகே உள்ள தனியார் ஹோட்டல் முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, அவரது இரு சக்கர வாகனத்தை அடையாளம் தெரியாத இருவர் எடுத்துச் செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, நவ்ஷாத் தனது நண்பருடன் வேறு வாகனத்தில், பைக் திருடிய நபர்களை விரட்டி பிடித்தனர்.
பின்னர், பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் அவர்களை ஒப்படைத்தனர். இதை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் பைக் திருட்டில் ஈடுபட்ட ஆனைமலை பகுதியை சேர்ந்த மணிகண்டன் (21) மற்றும் பட்டுராசா (21) என்ற இருவர் மீது வழக்கு பதிவு செய்து, நேற்று கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து திருடப்பட்ட இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் நவ்ஷாத் (38), அதே பகுதியில் லேத் வொர்க் ஷாப் நடத்தி வருகிறார். இந்நிலையில், இவர் நேற்று முன்தினம் பொள்ளாச்சி காந்தி சிலை சிக்னல் அருகே உள்ள தனியார் ஹோட்டல் முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, அவரது இரு சக்கர வாகனத்தை அடையாளம் தெரியாத இருவர் எடுத்துச் செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, நவ்ஷாத் தனது நண்பருடன் வேறு வாகனத்தில், பைக் திருடிய நபர்களை விரட்டி பிடித்தனர்.
பின்னர், பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் அவர்களை ஒப்படைத்தனர். இதை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் பைக் திருட்டில் ஈடுபட்ட ஆனைமலை பகுதியை சேர்ந்த மணிகண்டன் (21) மற்றும் பட்டுராசா (21) என்ற இருவர் மீது வழக்கு பதிவு செய்து, நேற்று கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து திருடப்பட்ட இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.