கோவையில் பிரசவ வலி ஏற்பட்ட பெண்ணுக்கு ஆம்புலன்சிலேயே ஆண் குழந்தை : ஓட்டுநர், ஊழியர்களுக்கு குவியும் பாராட்டு!!

கோவை: கோவையில் பெண் ஒருவருக்கு ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே பிரசவமாகியுள்ளது.


கோவை: கோவையில் பெண் ஒருவருக்கு ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே பிரசவமாகியுள்ளது.

கோவை தொண்டாமுத்தூரை அடுத்த கலிக்கநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் அழகு (25). கர்ப்பிணியான இவருக்கு இன்று காலை பிரசவ வலி ஏற்பட்டது.

இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் அங்கு சென்ற போது அந்த பெண்ணுக்கு அதீத பிரசவ வலி ஏற்பட்டது. அவசர நிலையை உணர்ந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ரகு, சதீஸ்குமார் மற்றும் மருத்துவ நுட்ப நிபுணர் பிரபு ஆகியோர் பெண்ணுக்கு ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே பிரசவம் பார்த்தனர்.

அப்போது அந்த் பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து தாயும் சேயும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



அவசர நிலையை உணர்ந்து தாயையும், சேயையும் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Newsletter

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...