கோவை மாநகராட்சியில் கொரோனா பரவல் 36.72-சதவீதமாக குறைவு.!!

கோவை: கோவை மாநகராட்சியில் கொரோனா பரவல் 36.72-சதவீதமாகக் குறைந்தது.


கோவை: கோவை மாநகராட்சியில் கொரோனா பரவல் 36.72-சதவீதமாகக் குறைந்தது.

கோவை மாநகராட்சி பகுதியில் கொரோனா பரவல் 36.72-சதவீதமாகக் குறைந்து உள்ளது. அதேநேரத்தில் ஊரக பகுதிகளில் சில இடங்களில் பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா முதல் அலையின் போது கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 70-சதவீதம் முதல் 75-சதவீதம் பேர் கோவை மாநகராட்சி பகுதியில் வசித்தனர்.

பின்னர் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையால் தொற்று கட்டுப்படுத்தப்பட்டது. இந்நிலையில் கொரோனா 2வது அலையிலும் கோவை மாநகராட்சி பகுதியில்தான் பாதிப்பு அதிகமாக இருந்தது.

ஆரம்பத்தில் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 65-சதவீதம் பேர் மாநகராட்சி பகுதியிலிருந்தனர். இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் 5-ஆயிரம் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வீடு, வீடாகச் சென்று சளி, காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் கண்டறியப்பட்டனர்.

இதன்மூலம் தொற்று பாதித்தவர்கள் விரைந்து கண்டறியப்பட்டு, அவர்களைத் தனிமைப்படுத்தப்பட்டதால் பாதிப்பு விரைவாகக் குறைந்தது.

இந்நிலையில் கோவை மாநகராட்சியில் கொரேனா பரவல் 36.72-சதவீதமாகக் குறைந்து உள்ளது. இது கடந்த 2-வாரங்களுக்கு முன் 40-சதவீதத்திற்கும் மேல் இருந்தது.

அதே நேரத்தில் மொத்த பாதிப்பில் ஊரக பகுதியான காரமடையில் கொரோனா பரவல் 7.48-சதவீதமாகவும், துடியலூரில் 10.42-சதவீதமாகவும், சூலூரில் 5.80-சதவீதமாகவும், ஆனைமலை பகுதியில் 5.63-சதவீதமாகவும், மதுக்கரை பகுதியில் 5.21-சதவீதமாகவும்.

கொரோனா பரவல் அதிகம் உள்ள பகுதிகளில் சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

Newsletter

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...