கோவை: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் காவல் நிலையத்தில் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் காவல் நிலைய ஆய்வாளர் கற்பகம் சார்பில் சட்டம் ஒழுங்கு கடைப்பிடிக்கும் வண்ணம் வால்பாறையில் உள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் காவல் நிலையத்தில் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் காவல் நிலைய ஆய்வாளர் கற்பகம் சார்பில் சட்டம் ஒழுங்கு கடைப்பிடிக்கும் வண்ணம் வால்பாறையில் உள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதேபோல, வால்பாறையில் சுமார் 150க்கும் மேற்பட்ட தங்க நகை விற்பனை மற்றும் அடகு கடைகள் உள்ளன. மேலும், வால்பாறை பகுதியில் சுமார் 10க்கும் மேற்பட்ட மருந்தகம் உள்ளன.

இந்த நிலையில், தங்க நகை விற்பனை மற்றும் அடகு கடைகள் உரிமையாளர்களுக்கும் வால்பாறையில் உள்ள மருந்தக உரிமையாளர்களுக்கும் வால்பாறை காவல் நிலையத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தங்க நகை அடகு கடையில் கண்டிப்பாக சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டும், தங்க நகைகள் அடகு, விற்பனை செய்ய வந்தால் அவர்களிடம் முறையாக முகவரி, ஆதார் அட்டை, செல்போன் நம்பர் பதிவு செய்ய வேண்டும் என்றும் சந்தேகத்திற்கு ஏற்ப நபர்கள் தங்க நகை வாங்க விற்க வந்தால் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும், ஒவ்வொரு நகை கடைகளிலும் சிசிடிவி கேமரா கட்டாயம் பொருத்தப்பட்டு இருக்க வேண்டும் என்று அறிவுரைகளை வழங்கினார்.
மேலும், வால்பாறையில் உள்ள மருந்தகம் கடைகளில் சட்டவிரோதமாக மருந்துகள் வாங்க வந்தால் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், டாக்டர் அறிவுறுத்தலின்படி மருந்துகளை விற்க வேண்டும், கொரோனா காலத்தில் அதிகப்படியான மருந்துகள் வாங்கினால் மருத்துவத் துறைக்கும், காவல்துறைக்கும் தெரிவிக்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் ஆய்வாளர் கற்பகம் தலைமையில் துணை ஆய்வாளர் கார்த்திகேயன் மற்றும் காவல் நிலைய காவலர்கள் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதேபோல, வால்பாறையில் சுமார் 150க்கும் மேற்பட்ட தங்க நகை விற்பனை மற்றும் அடகு கடைகள் உள்ளன. மேலும், வால்பாறை பகுதியில் சுமார் 10க்கும் மேற்பட்ட மருந்தகம் உள்ளன.
இந்த நிலையில், தங்க நகை விற்பனை மற்றும் அடகு கடைகள் உரிமையாளர்களுக்கும் வால்பாறையில் உள்ள மருந்தக உரிமையாளர்களுக்கும் வால்பாறை காவல் நிலையத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தங்க நகை அடகு கடையில் கண்டிப்பாக சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டும், தங்க நகைகள் அடகு, விற்பனை செய்ய வந்தால் அவர்களிடம் முறையாக முகவரி, ஆதார் அட்டை, செல்போன் நம்பர் பதிவு செய்ய வேண்டும் என்றும் சந்தேகத்திற்கு ஏற்ப நபர்கள் தங்க நகை வாங்க விற்க வந்தால் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும், ஒவ்வொரு நகை கடைகளிலும் சிசிடிவி கேமரா கட்டாயம் பொருத்தப்பட்டு இருக்க வேண்டும் என்று அறிவுரைகளை வழங்கினார்.
மேலும், வால்பாறையில் உள்ள மருந்தகம் கடைகளில் சட்டவிரோதமாக மருந்துகள் வாங்க வந்தால் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், டாக்டர் அறிவுறுத்தலின்படி மருந்துகளை விற்க வேண்டும், கொரோனா காலத்தில் அதிகப்படியான மருந்துகள் வாங்கினால் மருத்துவத் துறைக்கும், காவல்துறைக்கும் தெரிவிக்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் ஆய்வாளர் கற்பகம் தலைமையில் துணை ஆய்வாளர் கார்த்திகேயன் மற்றும் காவல் நிலைய காவலர்கள் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.