கோவை: கோவை கிணத்துக்கடவில் மேலும் 263 புதிய ரேசன் ஸ்மார்ட் கார்டு வந்துள்ளதால், வட்ட வழங்கல் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோவை: கோவை கிணத்துக்கடவில் மேலும் 263 புதிய ரேசன் ஸ்மார்ட் கார்டு வந்துள்ளதால், வட்ட வழங்கல் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 1089 பேர் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் புதிய ரேசன் ஸ்மார்ட் கார்டு கேட்டு இ-சேவை மையம் மூலம் விண்ணப்பத்து இருந்தனர். பின்னர் பல்வேறு கட்ட விசாரணை நடத்தியதில் 765 பேருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க தகுதி பெற்றனர்.
இந்நிலையில், கடந்த 2 மாதங்களில் புதிதாக அச்சிடப்பட்டு முதற்கட்டமாக 443 புதிய ரேசன் ஸ்மார்ட் கார்டு வந்ததையடுத்து, பொதுமக்களுக்கு வழங்கும் பணி நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், இரண்டாம் கட்டமாக இன்று மேலும் 263 புதிய ரேசன் ஸ்மார்ட் கார்டுகள் வந்துள்ளது. இதனால் புதிதாக வந்த ஸ்மார்ட் கார்டுகளை பொதுமக்களுக்கு வழங்கும் வகையில் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு வட்ட வழங்கல் அலுவலர் சார்பில் தகவல் கொடுக்கப்பட்டு, புதிய ஸ்மார்ட் கார்டு வாங்க வரும்போது ஆதார் அட்டை கொண்டு வந்து ஆவணமாக காண்பித்து பெற்றுக்கொள்ளலாம் என்று வட்ட வழங்கல் அலுவலர் முத்து தெரிவித்துள்ளார்.