கோவை: வால்பாறையில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கோவை: வால்பாறையில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதி ஒருவழி சாலையாக உள்ளது. சாலையோரம் இருசக்கர வாகனங்களும், நான்கு சக்கர வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டு வருவதால் போக்குவரத்துக்கு அவ்வப்போது இடையூறாக உள்ளது.
இந்நிலையில், வால்பாறை குடியிருப்புப் பகுதியில் வீடுகளில் வளர்க்கும் மாடுகளை காலையில் மேய்ச்சலுக்காக அனுப்பும் பொழுது, சுமார் 50க்கும் மேற்பட்ட மாடுகள் சாலையில் சுற்றித் திரிகிறது. சாலையின் குறுக்கே நின்று கொண்டும் சாலையில் படுத்து உறங்கிக் கொண்டும் போக்குவரத்துக்கு இடையூறாகவும், பொதுமக்களுக்கு இடையூறாகவும் காணப்படுவதால் அவ்வப்போது விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டு வருகிறது.

இதனால் வால்பாறை நகராட்சி ஆணையர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில், சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை நகராட்சி ஊழியர்கள் பிடித்து மாடு அடைக்கும் பட்டியில் அடைக்கப்பட்டுள்ளது இதில் மாடுகளின் உரிமையாளர்கள் அபராதத்தை கட்டி மாடுகளை மீட்டுச் செல்ல அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும், மாடுகளை சாலையில் சுற்றி திரிந்தால் கோவையில் உள்ள கோ மாதா நிலையத்திற்கு அனுப்பப்படும் என்று நகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார்.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதி ஒருவழி சாலையாக உள்ளது. சாலையோரம் இருசக்கர வாகனங்களும், நான்கு சக்கர வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டு வருவதால் போக்குவரத்துக்கு அவ்வப்போது இடையூறாக உள்ளது.
இந்நிலையில், வால்பாறை குடியிருப்புப் பகுதியில் வீடுகளில் வளர்க்கும் மாடுகளை காலையில் மேய்ச்சலுக்காக அனுப்பும் பொழுது, சுமார் 50க்கும் மேற்பட்ட மாடுகள் சாலையில் சுற்றித் திரிகிறது. சாலையின் குறுக்கே நின்று கொண்டும் சாலையில் படுத்து உறங்கிக் கொண்டும் போக்குவரத்துக்கு இடையூறாகவும், பொதுமக்களுக்கு இடையூறாகவும் காணப்படுவதால் அவ்வப்போது விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டு வருகிறது.
இதனால் வால்பாறை நகராட்சி ஆணையர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில், சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை நகராட்சி ஊழியர்கள் பிடித்து மாடு அடைக்கும் பட்டியில் அடைக்கப்பட்டுள்ளது இதில் மாடுகளின் உரிமையாளர்கள் அபராதத்தை கட்டி மாடுகளை மீட்டுச் செல்ல அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும், மாடுகளை சாலையில் சுற்றி திரிந்தால் கோவையில் உள்ள கோ மாதா நிலையத்திற்கு அனுப்பப்படும் என்று நகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார்.