பொள்ளாச்சி அருகே உள்ள யானை முகாமில் இன்று உலக யானைகள் தினம் கொண்டாட்டம்.!!

கோவை: டாப்ஸ்லிப் கோழிகமுத்தி யானை முகாமில் இன்று உலக யானைகள் தினம் கொண்டாடப்பட்டது.


கோவை: டாப்ஸ்லிப் கோழிகமுத்தி யானை முகாமில் இன்று உலக யானைகள் தினம் கொண்டாடப்பட்டது.

வனத்தைப் பாதுகாக்கும், யானைகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில், ஆண்டுதோறும் ஆகஸ்ட் 12-ஆம் நாள் உலக யானைகள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

இதன்படி இன்று பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட டாப்சிலிப் கோழிகமுத்தி யானை முகாமில் உலக யானைகள் தினம் கொண்டாடப்பட்டது.

டாப்சிலிப் கோழிகமுத்தி முகாமில், பராமரிக்கப்பட்டு வரும் 28 வளர்ப்பு யானைகளுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, கோழிகமுத்தி பகுதியில் உள்ள பிள்ளையார் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.



சிறப்பு வழிபாடு செய்யும்போது யானைகள் துதிக்கை தூக்கி தரிசனம் செய்த காட்சி அங்கிருந்த மலைவாழ் மக்கள் மற்றும் யானை பாகன் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.



கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக உலக யானைகள் தினம் ஆடம்பரம் இல்லாமலும் சுற்றுலாப்பயணிகள் இல்லாமல் கொண்டாடப்பட்டதாக வனத்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

Newsletter

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...