கோவை: கொரோனா பரவல் காரணமாகப் பொள்ளாச்சி மாட்டுச்சந்தை இரண்டு வாரங்களாக மூடப்பட்டுள்ளதால், விற்பனை முடக்கத்தால் வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கோவை: கொரோனா பரவல் காரணமாகப் பொள்ளாச்சி மாட்டுச்சந்தை இரண்டு வாரங்களாக மூடப்பட்டுள்ளதால், விற்பனை முடக்கத்தால் வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் ஒரு பகுதியிலுள்ள மாட்டுச்சந்தையில், வாரம் இருமுறை செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் விற்பனை நடப்பது வழக்கம்.
இங்குக் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து மாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கேரள மாநிலத்தில் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதால், கோவை மாவட்ட ஆட்சியர் பொள்ளாச்சி மாட்டுச் சந்தையை, மூட உத்தரவு பிறப்பித்தார்.

இதைத்தொடர்ந்து கடந்த இரண்டு வாரங்களாக மாட்டுச்சந்தையில் விற்பனை நடைபெறவில்லை. இதனால் மாடுகளை விற்கவும் வாங்கவும் முடியாமல் வியாபாரிகளும் விவசாயிகளும் தவித்து வருகின்றனர்.
மேலும், பொள்ளாச்சி மாட்டுச் சந்தை மூடப்பட்டதால் பல கோடி ரூபாய் வர்த்தகம் முடங்கியுள்ளது என்று வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் ஒரு பகுதியிலுள்ள மாட்டுச்சந்தையில், வாரம் இருமுறை செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் விற்பனை நடப்பது வழக்கம்.
இங்குக் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து மாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கேரள மாநிலத்தில் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதால், கோவை மாவட்ட ஆட்சியர் பொள்ளாச்சி மாட்டுச் சந்தையை, மூட உத்தரவு பிறப்பித்தார்.
இதைத்தொடர்ந்து கடந்த இரண்டு வாரங்களாக மாட்டுச்சந்தையில் விற்பனை நடைபெறவில்லை. இதனால் மாடுகளை விற்கவும் வாங்கவும் முடியாமல் வியாபாரிகளும் விவசாயிகளும் தவித்து வருகின்றனர்.
மேலும், பொள்ளாச்சி மாட்டுச் சந்தை மூடப்பட்டதால் பல கோடி ரூபாய் வர்த்தகம் முடங்கியுள்ளது என்று வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.