உலக யானைகள் தினம்: திருப்பூர் வனக்கோட்டத்தில் மலைவாழ் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு...!

திருப்பூர்: வனம் காக்கும் யானைகளை பாதுகாக்க மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த, ஆண்டுதோறும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி உலக யானைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.


திருப்பூர்: வனம் காக்கும் யானைகளை பாதுகாக்க மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த, ஆண்டுதோறும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி உலக யானைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

யானை இல்லையேல், காடில்லை என்பதை உணர்த்தும் வண்ணம் இன்று கோவை, நீலகிரி, திருப்பூர் என பல்வேறு வனக்கோட்டங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

அதன்படி, ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் கோட்டம், உடுமலைப்பேட்டை, 9/6ல் உள்ள வனசோதனைச் சாவடியில் இன்று உலக யானைகள் தினம் கொண்டாடப்பட்டது. இதில் மலைவாழ் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.

காடு வளமாக இருக்க, யானைகளின் பங்களிப்பு, மனிதர்களின் அலட்சியத்தால் யானைகளுக்கு ஏற்படும் இன்னல்கள் மற்றும் இறப்பு, யானைகளின் வலசை பாதைகளில் ஏற்படும் ஆக்கிரமிப்பு காரணமாக அவை ஊருக்குள் மற்றும் விவசாய நிலங்களில் புகுவது, மனித - யானை மோதலால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து மாவட்ட உதவி வனப்பாதுகாவலர் கணேஷ்ராம் விளக்கினார்.

உலகிலேயே அதிக யானைகள் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது..குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் தான் அதிக எண்ணிக்கையில் யானைகள் வாழ்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...