திருப்பூர்: கொரோனா தொற்று மூன்றாம் அலை பரவுவதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை மாவட்டரீதியாக அறிவித்துள்ளது.
திருப்பூர்: கொரோனா தொற்று மூன்றாம் அலை பரவுவதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை மாவட்டரீதியாக அறிவித்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை திருப்பூர், உடுமலை, தாராபுரம், காங்கேயம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் திறந்து வைக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், வியாபாரிகளின் தொடர் கோரிக்கை மற்றும் நலன் கருதி, கட்டுப்பாட்டை தளர்த்தி மாலை 6 மணி வரை கடைகள் திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நேற்று திருப்பூர் மாவட்டத்தில் 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், மாவட்டத்தில் 857 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை திருப்பூர், உடுமலை, தாராபுரம், காங்கேயம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் திறந்து வைக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், வியாபாரிகளின் தொடர் கோரிக்கை மற்றும் நலன் கருதி, கட்டுப்பாட்டை தளர்த்தி மாலை 6 மணி வரை கடைகள் திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நேற்று திருப்பூர் மாவட்டத்தில் 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், மாவட்டத்தில் 857 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.