கோவை: கோவை மேற்கு மண்டலம் கணபதி 46-வது வட்ட பகுதியில், பல நாட்களாக சாக்கடை தூர்வாரப்படாததால் அடைப்பு ஏற்பட்டு அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் மற்றும் தொற்றுநோய் பரவும் நிலை இருந்து வந்துள்ளது.
கோவை: கோவை மேற்கு மண்டலம் கணபதி 46-வது வட்ட பகுதியில், பல நாட்களாக சாக்கடை தூர்வாரப்படாததால் அடைப்பு ஏற்பட்டு அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் மற்றும் தொற்றுநோய் பரவும் நிலை இருந்து வந்துள்ளது.
கோவை மாநகர் மேற்கு மாவட்டம் கணபதி பகுதி, 46-வது வட்ட சித்தா தோட்டம் பகுதிவாழ் பொதுமக்கள் சார்பாக மீனாட்சி சுந்தரம், மளிகை கடை சிவகுமார், ஆகியோர் கடந்த ஒரு வருடமாக சாக்கடை தூர்வாரப்படாமல் அடைப்பு ஏற்பட்டு சாக்கடை நீர் தேங்கி இருப்பதால், அதை சரி செய்து கொடுக்குமாறு கணபதி பகுதி பொறுப்புக் குழு உறுப்பினர் கணபதி சம்பத்திடம் புகார் மனு அளித்தனர்.
அம்மனுவில், அதே பகுதியில் உள்ள மூகாம்பிகை நகர், பூந்தோட்டம், மாமர தோட்டம், பெரியார் நகர், ஆகிய பகுதிகளில் 7-க்கும் மேற்பட்ட தெரு விளக்குகள் எரியாததால், இரவு நேரங்களில் அந்தப் பகுதியில் தொடர்ந்து சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருவதாக குறிப்பிட்டிருந்தனர்.
மனுவின் அடிப்படையில், மாநகராட்சி அதிகாரிகளுக்கு அப்பகுதியில் மக்கள் படும் இன்னல்களை எடுத்துச்சொல்லி ஒரே நாளில் சாக்கடை அடைப்பை நீக்கும் இயந்திரம் மற்றும் தூய்மை பணியாளர்களை கொண்டு சாக்கடை தூர்வாரப்பட்டது. மேலும், பழுதடைந்த நிலையில் இருந்த தெரு விளக்குகளும் புதியதாக மாற்றி கொடுக்கப்பட்டது.
அதனால், பல நாட்களாக அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்பட்டு வந்த கணபதி பகுதி மக்கள், திமுக பொறுக்குழு உறுப்பினர் கணபதி சம்பத்திற்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
கோவை மாநகர் மேற்கு மாவட்டம் கணபதி பகுதி, 46-வது வட்ட சித்தா தோட்டம் பகுதிவாழ் பொதுமக்கள் சார்பாக மீனாட்சி சுந்தரம், மளிகை கடை சிவகுமார், ஆகியோர் கடந்த ஒரு வருடமாக சாக்கடை தூர்வாரப்படாமல் அடைப்பு ஏற்பட்டு சாக்கடை நீர் தேங்கி இருப்பதால், அதை சரி செய்து கொடுக்குமாறு கணபதி பகுதி பொறுப்புக் குழு உறுப்பினர் கணபதி சம்பத்திடம் புகார் மனு அளித்தனர்.
அம்மனுவில், அதே பகுதியில் உள்ள மூகாம்பிகை நகர், பூந்தோட்டம், மாமர தோட்டம், பெரியார் நகர், ஆகிய பகுதிகளில் 7-க்கும் மேற்பட்ட தெரு விளக்குகள் எரியாததால், இரவு நேரங்களில் அந்தப் பகுதியில் தொடர்ந்து சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருவதாக குறிப்பிட்டிருந்தனர்.
மனுவின் அடிப்படையில், மாநகராட்சி அதிகாரிகளுக்கு அப்பகுதியில் மக்கள் படும் இன்னல்களை எடுத்துச்சொல்லி ஒரே நாளில் சாக்கடை அடைப்பை நீக்கும் இயந்திரம் மற்றும் தூய்மை பணியாளர்களை கொண்டு சாக்கடை தூர்வாரப்பட்டது. மேலும், பழுதடைந்த நிலையில் இருந்த தெரு விளக்குகளும் புதியதாக மாற்றி கொடுக்கப்பட்டது.
அதனால், பல நாட்களாக அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்பட்டு வந்த கணபதி பகுதி மக்கள், திமுக பொறுக்குழு உறுப்பினர் கணபதி சம்பத்திற்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.