கோவை தடாகத்தில் இடித்து தள்ளப்பட்ட செங்கல் சூளை...! கோவிலுக்கு சொந்தமான 6 கோடி நிலம் மீட்பு; அறநிலையத்துறை அதிரடி நடவடிக்கை

கோவை: கோவை அருகே அம்மன் கோவிலுக்குச் சொந்தமான 6-கோடி மதிப்பிலான நிலத்தைத் தனியாருக்குச் சொந்தமான செங்கல்சூளையாகப் பயன்படுத்தப்பட்டு வந்ததைக் கண்டறிந்து இன்று கோவில் அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.


கோவை: கோவை அருகே அம்மன் கோவிலுக்குச் சொந்தமான 6-கோடி மதிப்பிலான நிலத்தைத் தனியாருக்குச் சொந்தமான செங்கல்சூளையாகப் பயன்படுத்தப்பட்டு வந்ததைக் கண்டறிந்து இன்று கோவில் அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.

கோவை தடாகம் பகுதியில் உள்ள அங்காளம்மன் மற்றும் மாரியம்மன் கோவில்களுக்குச் சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்குத் தெரிய வந்தது.

இதுதொடர்பாக, அங்கு ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் கடந்த 2-மாதங்களுக்கு முன்னர் கோவில் நிலத்தினை ஆக்கிரமிப்பு செய்து செங்கல் சூளை நடத்தி வந்த அதே பகுதியைச் சேர்ந்த ரங்கராஜ், தென்னரசு ஆகியோருக்கு இந்து சமய அறநிலைய சட்டப்படி நோட்டீஸ் கொடுத்து இருந்தனர்.



இந்நிலையில், ஆக்கிரமிப்புகளை அவர்கள் அகற்றிக் கொள்ளாத நிலையில் இன்று 6-கோடி ரூபாய் மதிப்புடைய 8.8-ஏக்கர் கோவில் நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.



மேலும் கோவில் நிலத்தில் செயல்பட்ட செங்கல் சூளைகள் மற்றும் செங்கல் உலர்த்தும் இடம் போன்றவற்றை பொக்லைன் மூலம் அதிகாரிகள் இடித்து அப்புறப்படுத்தினர்.

பின்னர், இந்த இடம் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமானது என அறிவிப்புப் பலகையையும் அதிகாரிகள் வைத்தனர்.

நீண்ட காலமாகச் செங்கல் சூளை நடத்துபவர்களால் ஆக்கிரமிப்பு செய்யப் பட்ட இந்த கோவில் நிலம் மீட்கப்பட்டு இருப்பது அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...