கொரோனா 3-வது அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: முதியோர் இல்லங்களில் தீவிர கண்காணிப்பு.!!

கோவை: கொரோனா 3-வது அலை தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கோவை மாவட்டத்தில் சமூக நலத்துறையின் கீழ் உள்ள முதியோர் இல்லங்களில் முதியோர்களுக்குத் தினமும் காய்ச்சல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.


கோவை: கொரோனா 3-வது அலை தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கோவை மாவட்டத்தில் சமூக நலத்துறையின் கீழ் உள்ள முதியோர் இல்லங்களில் முதியோர்களுக்குத் தினமும் காய்ச்சல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் சமூக நலத்துறையின் கீழ் 30-க்கும் மேற்பட்ட முதியோர் இல்லங்கள் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. இந்த முதியோர் இல்லங்களில் 819-முதியோர்கள் தங்கியுள்ளனர்.

மகன், மகள், உறவினர்கள் போன்றவர்களால் கைவிடப்பட்டவர்களும், தனிமையில் வசித்தவர்களும் என ஆதரவற்ற முதியோர்கள் தான் இந்த இல்லங்களில் பெரும்பாலும் உள்ளனர்.

கொரோனா 3-வது அலை தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதியோர்களைக் கண்காணிக்கும் விதமாக மாவட்டத்தில் சமூக நலத்துறையின் கீழ் உள்ள 30-முதியோர் இல்லங்களில் உள்ள முதியோர்களுக்கு கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் அவர்களுக்குத் தினமும் காய்ச்சல் உள்ளதா? என வெப்ப அளவு பரிசோதனையும் செய்யப்பட்டு வருகிறது.

இது குறித்து சமூக நலத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "முதியோர் இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று முதியோர்களிடம் கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வை அதிகாரிகள் அளித்து வருகின்றனர்.

காய்ச்சல் பரிசோதனைகள் மேற்கொள்வதுடன் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க ஜிங் போன்ற விட்டமின் மாத்திரைகள் மருத்துவரின் பரிந்துரைப்படி வழங்கப்படுகிறது.

மேலும் வாட்ஸ் ஆப் குரூப் மூலமும் தினமும் முதியோர் இல்லங்கள் கண்காணிக்கப்படுகிறது. இந்த குரூப்பில் முதியோர் இல்லங்களுக்குச் சென்றுவிட்டு அங்கு மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், காய்ச்சல் பரிசோதனை தொடர்பாகவும் அதிகாரிகள் பதிவிடுவார்கள்," என்றார்.

Newsletter

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...