திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்களிடம் தகாத வார்த்தைகள் பேசி, மன உளைச்சலுக்கு ஆளாக்கிய டீன் முருகேசன் மற்றும் துணை உறைவிட மருத்துவர்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்களிடம் தகாத வார்த்தைகள் பேசி, மன உளைச்சலுக்கு ஆளாக்கிய டீன் முருகேசன் மற்றும் துணை உறைவிட மருத்துவர்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர் அரசு மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். தற்போது திருப்பூர் அரசு மருத்துவமனை, அரசு மருத்துவமனை கல்லூரியாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதனிடையே திருப்பூர் அரசு மருத்துவமனை டீனாக நியமிக்கப்பட்டுள்ள முருகேசன், அங்கு பணியாற்றும் செவிலியர்களிடம் விரோத போக்கைக் கையாண்டு வருவதாகவும், துணை உறைவிட மருத்துவர்கள் வினோத், செந்தில் ஆகியோர் தகாத வார்த்தைகளால் பேசுவதாகவும், செவிலியர்களுக்கு உடை மாற்றக் கூட அறை தரமறுப்பதாகவும் கூறி இன்று 50க்கும் மேற்பட்ட செவிலியர்கள் அரசு மருத்துவமனை வளாகத்தில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து செவிலியர்கள் கூறுகையில், திருப்பூர் அரசு மருத்துவமனையில் 174 நிரந்தர செவிலியர்கள், 51 ஒப்பந்த செவிலியர்கள், 22 தற்காலிக செவிலியர்கள் என 200க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகிறோம். மருத்துவமனை டீன் முருகேசன் மற்றும் துணை உறைவிட மருத்துவர்கள் வினோத், செந்தில் ஆகியோர் எங்களுக்குக் கூடுதலாக பணிகள் கொடுத்து, தாகத வார்த்தைகள் பேசி மன உளைச்சல் ஏற்படுத்துகின்றனர்.
பணி நேரத்தில் பெண்களுக்கு உடை மாற்றும் அறை கூட கொடுக்க மறுக்கின்றனர். செவிலியர்களுக்கான பணிகளை விடுத்து மற்ற பணிகளைச் செய்ய வற்புறுத்தி வருகின்றனர்.

எங்களுடைய கோரிக்கைகளைக் கண்டுகொள்ளாமல் விரோத போக்கைக் கையாண்டு வருகின்றனர். எனவே டீன் முருகேசன் மற்றும் துணை உறைவிட மருத்துவர்கள் வினோத், செந்தில் ஆகியோரை பணியிட மாற்றம் செய்யத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈட்டுப்பட்டுள்ளோம் என்றனர்.
திருப்பூர் அரசு மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். தற்போது திருப்பூர் அரசு மருத்துவமனை, அரசு மருத்துவமனை கல்லூரியாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதனிடையே திருப்பூர் அரசு மருத்துவமனை டீனாக நியமிக்கப்பட்டுள்ள முருகேசன், அங்கு பணியாற்றும் செவிலியர்களிடம் விரோத போக்கைக் கையாண்டு வருவதாகவும், துணை உறைவிட மருத்துவர்கள் வினோத், செந்தில் ஆகியோர் தகாத வார்த்தைகளால் பேசுவதாகவும், செவிலியர்களுக்கு உடை மாற்றக் கூட அறை தரமறுப்பதாகவும் கூறி இன்று 50க்கும் மேற்பட்ட செவிலியர்கள் அரசு மருத்துவமனை வளாகத்தில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து செவிலியர்கள் கூறுகையில், திருப்பூர் அரசு மருத்துவமனையில் 174 நிரந்தர செவிலியர்கள், 51 ஒப்பந்த செவிலியர்கள், 22 தற்காலிக செவிலியர்கள் என 200க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகிறோம். மருத்துவமனை டீன் முருகேசன் மற்றும் துணை உறைவிட மருத்துவர்கள் வினோத், செந்தில் ஆகியோர் எங்களுக்குக் கூடுதலாக பணிகள் கொடுத்து, தாகத வார்த்தைகள் பேசி மன உளைச்சல் ஏற்படுத்துகின்றனர்.
பணி நேரத்தில் பெண்களுக்கு உடை மாற்றும் அறை கூட கொடுக்க மறுக்கின்றனர். செவிலியர்களுக்கான பணிகளை விடுத்து மற்ற பணிகளைச் செய்ய வற்புறுத்தி வருகின்றனர்.
எங்களுடைய கோரிக்கைகளைக் கண்டுகொள்ளாமல் விரோத போக்கைக் கையாண்டு வருகின்றனர். எனவே டீன் முருகேசன் மற்றும் துணை உறைவிட மருத்துவர்கள் வினோத், செந்தில் ஆகியோரை பணியிட மாற்றம் செய்யத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈட்டுப்பட்டுள்ளோம் என்றனர்.