கோவை: முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணியின் வங்கி கணக்குகள் அனைத்தும் முடக்கம் செய்து லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
கோவை: முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணியின் வங்கி கணக்குகள் அனைத்தும் முடக்கம் செய்து லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த இரண்டு நாட்களாக எஸ். பி. வேலுமணி வீடு உட்பட தமிழகத்தில் உள்ள 52க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைகள் மேற்கொண்டனர்.
தொடர்ந்து 12 மணி நேரம் அவர் சென்னையில் தங்கியிருந்த எம்.எல்.ஏ., விடுதியிலும் அவரிடம் நேரடி விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையின் முடிவில் பல்வேறு ஆவணங்கள் கிடைத்து இருப்பதாக கூறி இருந்தனர்.
அதேபோல, சோதனையில் கணக்கில் வராத ரூ.13 லட்சம் ரொக்கப் பணம், ரூ.2 கோடி மதிப்பிலான ஆவணங்கள், கணினிகள், ஹார்ட் டிஸ்க்குகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறையினா் தெரிவித்தனர்.
இந்த நிலையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் தற்போது முன்னாள் அமைச்சர் வேலுமணியின் வங்கி கணக்குகளை முடக்கி உள்ளனர்.
மேலும், பறிமுதல் செய்த சொத்து ஆவணங்களை ஆய்வு செய்யும் பணியில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த இரண்டு நாட்களாக எஸ். பி. வேலுமணி வீடு உட்பட தமிழகத்தில் உள்ள 52க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைகள் மேற்கொண்டனர்.
தொடர்ந்து 12 மணி நேரம் அவர் சென்னையில் தங்கியிருந்த எம்.எல்.ஏ., விடுதியிலும் அவரிடம் நேரடி விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையின் முடிவில் பல்வேறு ஆவணங்கள் கிடைத்து இருப்பதாக கூறி இருந்தனர்.
அதேபோல, சோதனையில் கணக்கில் வராத ரூ.13 லட்சம் ரொக்கப் பணம், ரூ.2 கோடி மதிப்பிலான ஆவணங்கள், கணினிகள், ஹார்ட் டிஸ்க்குகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறையினா் தெரிவித்தனர்.
இந்த நிலையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் தற்போது முன்னாள் அமைச்சர் வேலுமணியின் வங்கி கணக்குகளை முடக்கி உள்ளனர்.
மேலும், பறிமுதல் செய்த சொத்து ஆவணங்களை ஆய்வு செய்யும் பணியில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.